‘சொல்லின் செல்வர்’ ஸ்ரீ.பி.மணிகண்டன் எம்.ஏ.தமிழ் இலக்கியம், எம்.ஏ. இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் மற்றும் எம்.ஏ.பொதுமேலாண்மை ஆகிய முதுகலை பட்டங்கள் பெற்றவர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பெற்று வருகின்றார். 3000 மேடைகளுக்கு மேல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் பல வெளி நாடுகளில் இலக்கியம் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளில் பங்கு கொண்டு வருகின்றார்.
மேலும் பட்டிமன்றம், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளம் ஆகியவைகளில் உரையாற்றி மக்களின் மனதை கொள்ளை கொண்டு வருகின்றார்.
அவருடைய உரையில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்பது உங்களில் யாவருக்கும் நன்கு தெரியும்.
ஆலயங்களில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் நேரடி வர்ணனை செய்கின்ற ஞானமும், திறமையும் ஒருங்கே பெற்றவர்.
அவருடைய ஆற்றல் மிக்க உரைகளை இலக்கிய மேடைகளிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் மேலும் சமூக ஊடகங்களிலும் கேட்டிட முடியும்.
‘சொல்லின் செல்வர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். மேலும் ஆன்மிகம், தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியல் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Негізгі бет ஸ்ரீ.பி.மணிகண்டன் | THAMBRAAS STATE CONFERENCE | TRICHY
Пікірлер: 57