Garuda Purana in Tamil lists the 30 Dhanam described in Garuda Puranam.
தானம் | தர்மம் - என்ன வித்தியாசம்?
கருடபுராணத்தில் ..... கருடன்..... பகவானிடம் "பகவானே தானம் செய்யும் முறைகள் யாவை? தானம் கொடுப்பவன் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்? தானம் பெறுபவன் எப்படி பட்டவனாக இருக்க வேண்டும்? தானம் செய்வதற்கு ஏற்ற பொருள்கள் என்ன? தானத்தின் பலன்கள் என்ன ? என்று கேட்டார்.
பகவான் கருடனை பார்த்து புன்னகையடன் "கருடனே ! எந்த ஒரு செயலுக்கும் மனத்தூய்மை அவசியம் . நாம் கொடுக்கும் முறையில் ஒரு வேறுபாடு உண்டு, அதவாது ஒருவர் கேட்டு நாம் வழங்கும் பொருள்களுக்கு தர்மம் என்று பெயர், நாமாக முன்வந்து கொடுப்பதற்கு தானம் என்று பெயர். தனமே தர்மத்தை விட சிறந்தது" .
மேலும் பகவான் கருடனிடம் "தானம் கொடுப்பவர் ஆழ்ந்த பக்தியுடன், மன சுத்தியுடன், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தானம் செய்தல் வேண்டும், முக்கியமாக நல்ல வழியில் சம்பாதித்த பொருளாக இருக்க வேண்டும்". "அதே போல் தானம் பெறுபவர் நல்லகுணம் மற்றும் நல்லொலுக்கம் உடையவராக இருக்க வேண்டும். இந்த தகுதி இல்லாதவன் தானம் பெற்றால் நரகத்தையே அடைவான், தானம் கொடுத்தவருக்கும் எந்த பலனும் கிட்டாது."
எனவே நாம் வாழும் நாட்களில் நல்லகுணம் மற்றும் நல்லொலுக்கம் உள்ளவர்களுக்கு தானம் செய்து நற்பலன்களை அடைவோம்.
கருட புராணம் தானத்தின் பலன்கள்:
1. கோதானமே சிறந்த தானம், கோதானம் செய்தால் நன்றாக சுகித்து வாழ்ந்து அனுபவிப்பர்.
2. அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
3. பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
4. குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பர்.
5. தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பர்.
6. வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் சுகங்களை அனுபவிப்பார்.
7. இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்கினிலோகத்தில் சுகங்களை அனுபவித்து ஆனந்தமாயிருப்பர்.
8. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்து இந்திரலோகத்தில் சுகங்களை அனுபவிப்பர்.
9. குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர் 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் சுகங்களை அனுபவிப்பர்.
10. நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் சுகங்களை அனுபவிப்பர்.
11. தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர் மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.
12. பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி இல்லா பெருநிலையை அடைவார்கள்.
13. நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு சென்று சுகங்களை அனுபவிப்பர்.
14. தீர்த்த யாத்திரை புரிகின்றவருக்கு சத்தியலோகத்திற்கு சென்று சுகங்களை அனுபவிப்பர்.
15. ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.
16. பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர் குபேர லோகத்தில் சுகங்களை அனுபவித்து ஒரு மன் வந்தரம் வாழ்வர்.
17. பண கஷ்டத்தில் இருப்பவருக்கு பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் சுகங்களை அனுபவித்து வாழ்வார்கள்.
18. நீர் நிலைகளை சீர்திருத்துபவரும, நீர் நிலைகளை உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ஆனந்தமாக சுகங்களை அனுபவித்து வாழ்வார்கள்.
19. பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைந்து சுகித்திருப்பர்.
20. புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபதம் அடைந்து சுகித்திருப்பர்.
21. தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.
22. பௌர்ணமியில் டோலோற்சவம்(ஊஞ்சல் உற்சவம்) செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவர்.
23. தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர் திடகாத்திரமாக நல்ல கீர்த்தியோடு பிரகாசிப்பர்.
24. சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர் ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பர்.
25. ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.
26. அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.
27. விரதம், நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் சுகவாசம் செய்வர்.
28. சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.
29. ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவரின் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்கும்.
30. இதைப் படிப்பவரும், கேட்பவரும், புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெற்று சுகித்திருப்பர்.
#aalayamselveer #garudapuranam
Негізгі бет தானம் | தர்மம் - என்ன வித்தியாசம்? கருட புராணம் கூறும் 30 தான பலன்கள் | Garuda Puranam in Tamil
Пікірлер: 489