தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு கோயமுத்தார் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியல் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தெற்கு ரயில்வே துறையும் இணைந்து 30.09.2024 மற்றும் 01.10.2024 இரண்டு நாள் மதுக்கரை இரயில்வே நிலையத்தில் தூய்மைப்பணியினை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை, ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் கல்பனா துவங்கி வைத்தார். பாலக்காடு டிவிசன் துணை வர்த்தக மேலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு தூய்மை இந்தியா" என்னும் தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் தெற்கு ரயில்வே அனைவரும் ஒண்ணுகூடி தூய்மை இந்தியா திட்டத்தின் உறுவிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், மதுக்கரை இரயில்நிலைய நுகர்வோர் மேற்பார்வையார் மது, மதுக்கரை ரயில்நிலைய மேலாளர் சுரேஷ்குமார், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் கணிப்பொறி அழறிவியல் துறை தலைவர் பிரியா, வணிகவியல் துறை தலைவர் சேகர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பெல்லாரோ ஜான் நீகன், சாவித்ரி மாற்றும் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியினை, மதுக்கரை நகர்வோர் பரிந்துரைக் குழுவின் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.
Негізгі бет தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு மதுக்கரை இரயில்வே நிலையத்தில் தூய்மைப்பணி
Пікірлер