அம்பாளை நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படி வந்து நம் மனதை ஆட்கொண்டருள்வாள்.
அவளை அம்மாவாக நினைத்துப் பாடினால் அன்னையாய் அரவணைத்து ஆறுதல் தருவாள்
தோழியாய் நினைத்தால் மனதிற்கு இனிய தோழியாய் நின்றருள்வாள்
யாதுமாகி நின்றருளும் சக்தியவள் சந்ததமும் நினைந்திட சந்ததமும் நமக்கு துணையிருப்பாள்.
5 வருடம் முன்னர் பாலா பரமேஸ்வரியை நினைத்து தாயுனை சேயாய் காண்கையில் சேய் நானும் தாயாய் மகிழ்ந்தேனே என்று எழுதினதை என் கஸின் ஹேமா மிக அற்புதமாக பாடிக் கொடுத்தார்.
கடந்த சிவராத்திரி அன்று ஔவைக் கோட்ட சிவராத்திரி விழாவில் ஸ்ரீ மதி ப்ரியம் வதா முரளி அவர்கள் அந்த பாடலுக்கு பக்தி பா"வம் பெருக அம்பிகையை கொஞ்சி கொஞ்சி அழைத்து எனக்கு எதிர் பாராத இன்ப அதிர்ச்சி தந்து விட்டார்.
இசையும் பக்தி பா"வமும் ஒன்று சேர மனக் கண்ணில்
பல பாலா திரிபுரசுந்தரிகள் பிரத்யக்ஷ தர்மாம்பிகைகளாக தரிசனம் கொடுத்தார்கள் என்று தான் உணர்ந்தேன், மகிழ்ந்தேன் , நெகிழ்ந்தேன்.🙏🙏
மிலட்டூர் ஸ்ரீ நடராஜன் அவர்களின் புதல்வி ஸ்ரீ மதி ப்ரியம் வதா முரளிக்கும் அவர்களின் மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பலப்பல.
Негізгі бет தாயுனைக் சேயாய் காண்கையில் பாடல் அருமையான நடனமாய்
Пікірлер: 3