தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
சங்காரண்யேஸ்வரர் கோயில் தலசங்காடு 108/274
ஈசனை பூஜை செய்து திருமால் சங்கு பெற்ற தலம்
மூலவர்: சங்காரண்யேஸ்வரர்
அம்பாள்: செளந்தரநாயகி
தலமரம்: புரசமரம்
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்
புராண பெயர்: திருத்தலைச்சங்காடு
தற்போதைய பெயர்: தலைச்சங்காடு
மாவட்டம்: மயிலாடுதுறை
தலசிறப்பு
இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாகஅருள்பாலிக்கிறார். மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.சிவனின் தேவாரப்பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 108 வது தேவாரத்தலம் ஆகும்.
தலபெருமை:
கோயில் அமைப்பே சங்கு வடிவில்அமைந்துள்ளது. ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள். கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஏராளமான சிவாலயங்கள் கட்டியுள்ளான். அதில் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்ட கோயில்களும் கட்டியுள்ளான். அப்படிப்பட்ட மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம் , வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.,
தல வரலாறு:
மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து சங்குகளில் தலையானதான பாஞ்சஜன்ய சங்கை தனது ஆயுதமாக பெற்ற தலம். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு.
கோவிலமைப்பு
கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இக்கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம். கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
பிராத்தனை
குழந்தைப்பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பவுர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.
வழிபடுவோர்க்கு இஷ்ட சித்திகளை அளிக்கவல்ல தலம்.
திருவிழா
வைகாசி விசாகம் 5 நாள்திருவிழாவாக சிறப்பாக நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனை நடக்கிறது.
ஆலய அர்ச்சகர் தொலைபேசி
+91 9600155155
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google Map Link
maps.app.goo.g...
திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோயில் தரிசனம்
• திருவீழிமிழலை திருவீழி...
தேனூர் நந்திகேஸ்வரர் கோயில் தரிசனம்
• தேனூர் நந்திகேஸ்வரர் க...
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் வழியாக பூம்புகார் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் தலைச்சங்காடு அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - சென்னை சாலையில் நாகப்பட்டினத்தில் இருந்து 50 கி.மீ, காரைக்காலில் இருந்து 30 கி.மீ, தரங்கம்பாடியில் இருந்து 17 கி.மீ, திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் இருந்து 8 கி.மீ மற்றும் சீர்காழியில் இருந்து 16 கி.மீ தொலைவில் தலைச்சங்காடு அமைந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் நகர
பேருந்திலோ அல்லது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால், தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் வழியாக சீர்காழி, சிதம்பரம், புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் பேருந்தில் பயணம் செய்தும் தலைச்சங்காடு அடையலாம்.
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்
Негізгі бет தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | பெருமாள் சிவபெருமானிடமிருந்து சங்கு பெற்றுக்கொண்ட திருத்தலம்
Пікірлер: 13