#dharmapuri #dmk #kanneer panthal#Tirupur villa# தர்மபுரி திமுக கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
தர்மபுரி உழவர் சந்தை அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் கோவிந்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழரசங்களை வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர்தங்கமணி, நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, சம்பந்தம், கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் காசிநாதன், பொன்மகேஸ்வரன், ராஜா, ரஹீம், குமார், ரவி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Негізгі бет தர்மபுரி திமுக கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
Пікірлер