திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
திருப்புகழ் 228 பாதி மதிநதி (சுவாமிமலை)
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர நுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
பாடியவர் - சரஸ்வதி அம்மா
#youtubevideo
#arunakirinathar
#thiruppugazh
#paathimathinathi
#suvamimalai
#like
#share
#comment
#subscribetomychannel
#yuvasagi
#devotionalsongs
#murugansongs
Негізгі бет திரு அருணகிரிநாதர் அருளிய | திருப்புகழ் - 228 பாதி மதிநதி சுவாமிமலை Thiruppugazh 228 padhimadhinadhi
Пікірлер: 5