திருமண தடை நீக்கும் தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலி லட்சுமி நரசிம்மர்
மூலவர்: ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்மர்
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
தலவிருட்சம்: வில்வம்
ஊர்: தம்மம்பட்டி
மாவட்டம்: சேலம்
தலவரலாறு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்பம்பட்டி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ உக்ர கதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாகும்.
மலை சாதி மக்கள் தங்கள் விலை பொருட்களாகிய காய், கனி, வாசனை திரவியங்களை இங்கு விற்று செல்வது வழக்கம். அவர்களுள் கொல்லிமலையை சார்ந்த லட்சுமி எனும் பெண் ஒருத்தி அவள் கொண்டு வந்த வாழைப்பழம் தினமும் காணாமல் போகவே இது பற்றி ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார்.
பின்னர் பெரியவர்களும் செய்வதறியாது திகைத்தனர். இது குறித்து ஆழ்ந்த சிந்தனையில் உறங்கிய லட்சுமியின் கனவில் ஸ்ரீமத் நாராயணன் தோன்றி காணாமல் போன வாழைப்பழத்திற்கு நானே காரணம் என்றும், மலை சாதியினர் இரவு தங்கும் இடத்தில் கதலி என்னும் பழத்தின் வடிவில் சுயம்பு பூர்த்தியாக இருப்பதாகவும் இங்கேயே ஆலயமும் எழுப்பி எம்மை வழிபடும்படியும் கூறி மறைந்தார்.
தற்போதைய மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மூர்த்தியின் மங்கள வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருவதாக தல வரலாறு கூறுகின்றது.
ஆலய அமைப்பு
இந்த கோயிலின் முகப்பில் 49 அடி உயர ஆஞ்சநேயர் எழுந்தருளி காட்சி தருகின்றார்.
அருகில் ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வாராக ஸ்ரீ விநாயகர் பெருமானும், கோபுர வாயிலை கடந்தவுடன் ஸ்ரீபெருமாள் திருபாதமும், கொடிக்கம்பமும் வைகுண்ட பெருமாள் சுதைச் சிற்பமும் அமைதி பெற்றுள்ளது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நோக்கியவாறு கருடாழ்வாரும் காட்சி தருகின்றார்.
ஜெயன், விஜயன் ஆகிய வார பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் பன்னீர் ஆழ்வார்களின் தரிசனமும் கிடைக்கின்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் உற்சவமூர்த்தியை ஸ்தானத்தில் சுயம்பு கதலி மூர்த்தியை மூலவராக கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சங்கு, சக்கர அவயகரத்துடன் திருமகளை தன் தொடை மீது அமர்த்தி அனைத்து திருக்கோலத்துடன் தாமரை பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
தல சிறப்பு
இந்த தலத்தில் வில்வ மர நிழலில் அஷ்ட ஐஸ்வர்யங்களை வழங்கும் அஷ்ட லட்சுமி அருளுவது தனி சிறப்பு.
பிராத்தனை
நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை. வேண்டிய பிராத்தனையை உடனே நிறைவேற்றும் நரசிம்மர். திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் கிடைக்க தாங்கொண்ணா துயரம் நீங்கி இன்பம் பெறுக கடன் பிரச்சினை தீர தொழில் அபிவிருத்தி அடைய இந்த தலத்தில் உள்ள நரசிம்மரிடம் வழிபடலாம்.
இந்த தலத்தில் உள்ள அஷ்ட லட்சுமி வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும்.
அமைவிடம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இருந்து கெங்கவல்லி செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உள்ள தம்மம்பட்டி என்ற ஊரில் இருந்து கெங்கவல்லி செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக தம்மம்பட்டி வரலாம். திருச்சி, துறையூர், கெங்கவல்லி , ராசிபுரம் ஆத்தூர் மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
கோயில் Google Map Link
maps.app.goo.g...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9443610871
+91 9566788403
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join Our Channel WhatsApp Group
chat.whatsapp....
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்
Негізгі бет திருமண தடை நீக்கும் தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயில் | அஷ்ட லட்சுமி அருளும் தலம்
Пікірлер: 13