Gowri Shop
gowrishop.com
Gowri Shop
whatsapp
+91 78456 36886
POOJA THINGS
gowrishop.com/products/pooja-...
Gowri Shop Products are available in Bharathi Super Market Salem 8825088250
To see the video about my experience about this song
• அதிசயம் ஆனால் உண்மை இந...
ஒவ்வொருமுறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிறைவடைந்த பின்னர், திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களின் தாயார் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய பல தடைகள் வருகிறது சாமி இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்பார்கள். வாரியார் சுவாமிகள் சத்திய வாக்காக அனைவருக்கும் சொல்லும் அற்புத மந்திரம் தான் அருணகிரி நாதர் சுவாமிகள் இயற்றிய இந்த திருமணத்திருப்புகழ்.
1 முறை விளக்கேற்றினால் போதும். 6 தடவை மந்திரத்தை சொல்ல வேண்டும்.
இம்மந்திரத்தை விளக்கேற்றி வைத்து தினமும் 6 தடவை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும். திருமண வயதில் இருக்கும் பெண்கள் அல்லது பெண்ணின் தாயார் அல்லது மணமகன் அல்லது மணமகனின் தாயர் இம்மந்திரத்தை தொடர்ந்து கூறினால் உடனடியாக பலன் உண்டு. திருமணமானவர்கள் தொர்ந்து இம்மந்திரத்தை கூறினால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
ஓம் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின் கண் அணைமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சல்
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து உன் இருதாள் இறைஞ்சும்
ம(அ)டியாரி (இ)டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல (அ)மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
எங்கள் குறை தீர வந்து குறுகாயோ
அலைவாயுகந்த பெருமாளே !
See the meening of the song and song in English down
......... சொல் விளக்கம் .........
விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*
வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,
மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
வசை மொழிகளைக் கூற,
குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்
பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த
கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?
மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
வீழ்ந்து படவும்,
அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.
Song 101 - viRalmAran aindhu (thiruchchendhUr)
viRalmAran aindhu malarvALi sindha
migavAnil indhu ...... veyilkAya
midhavAdai vandhu thazhalpOla ondRa
vinaimAdhar thamtham ...... vasai kURa
kuRavANar kundRil uRaipEdhai koNda
kodidhAna thunba ...... mayaltheera
kuLirmAlai yinkaN aNimAlai thandhu
kuRaitheera vandhu ...... kuRugAyO
maRimAn ugandha iRaiyOn magizhndhu
vazhipAdu thandha ...... madhiyALA
malai mAvu sindha alaivElai anja
vadivEl eRindha ...... athidheerA
aRivAl aRindhun iru thAL iRainjum
adiyAr idainjal ...... kaLaivOnE
azhagAna sempon mayil mEl amarndhu
alaivAy ugandha ...... perumALE.
Light Sting by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com
Негізгі бет திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்
Пікірлер: 313