தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
சித்தநாதேசுவரர் கோயில்
திருநறையூர் நாச்சியார்கோயில் (128/274)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 65வது தலம்.
மூலவர்: சித்தநாதர், வேதேசுவரர், நரேசுவரர்,சித்தநாதேசுவரர்
தாயார்: அழகம்மை, சௌந்தர நாயகி
தல விருட்சம்: பவள மல்லிகை
தீர்த்தம்:சூல தீர்த்தம்
தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரர்
சித்தர் வழிப்பட்ட லிங்கம்
சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என்றும் அழைக்கபடுகிறது.
சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார்.
தலச்சிறப்பு
மாசி மாதத்தில் முன்று நாட்களும், ஆவணி மாதத்தில் முன்று நாட்களும் சூரிய கிரணம் மூலவர் மீது படுகின்றது
தலவரலாறு
ராமாயண காலத்திற்கு பிறகு அனுமனுக்கே முதலிடமாக போனதில் கருடனுக்கு வருத்தம்
அவர் மன புழுக்கத்தை
ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சொல்ல
மகாலெட்சுமி நான் மனித உருவில் மறைந்து வளர்கிறேன் நீ கண்டுபிடித்து எம்பெருமானுடன் திருக்கல்யாணம் செய்து வை என கூறி மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான்
திருநரையூர் சித்தீஸ்வரம்.
மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் சிவனை வணங்கி வந்தார்.
மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.
சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் மனைவி விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.
மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து வந்தார்.
கருட பகவான் உலகத்தையே சுற்றி வந்து மகாலெட்சுமி இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.
கருடனின் விண்ணப்பத்திற்கு இணங்க மகாலெட்சுமியை
மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார் மகரிஷி.
சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.
தல பெருமை
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.
மழலை மகாலட்சுமி என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "#மழலை_மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
பொது தகவல்
பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை.
கோரக்க சித்தர்
கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார்.
இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார்.
சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.
தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.
பிரார்த்தனை
சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
புதன் கிழமை புத ஹோரையில் சித்தநாதேஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்வித்து, பித்ரு தோஷ பரிகாரம் தேடிக் கொள்கின்றனர்.
நடைதிறப்பு
காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோயில் கடைவீதி பேருந்து முன்பு உள்ள நிறுத்தத்தில் திருநறையூர் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், குடவாசல், நாகப்பட்டினம், நன்னிலம், எரவாஞ்சேரி மற்றும் பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் அனைத்து பேருந்துகளும் திருநறையூரில் நின்று செல்லும்.
நாச்சியார் கோயில் தரிசனம்
• கும்பகோணம் நாச்சியார் ...
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில் | மழலை மகாலட்சுமி பிறந்த தலம் | கோரக்கர் சித்தர் வழிபட்ட தலம்
Пікірлер: 44