திருநெல்லிகா நெல்லிவனநாதர் கோயில்
மூலவர்: நெல்லிவனநாதர்
அம்பாள்: மங்கள நாயகி
தலவிருட்சம்: நெல்லி
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சூர்ய தீர்த்தம்
ஊர்: திருநெல்லிகாவல்
மாவட்டம்: திருவாரூர்
திருநெல்லிகா நெல்லிவனநாதர் ஆலயம் காவிரி தென்கரை தலங்களில் 117 வது தலமாகவும்,தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 181 வது தலமாக திகழ்கின்றது.
தலவரலாறு
தேவலோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. ஒரு முறை துர்வாசரை மதிக்காததால், அவர் "" நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள், ''என சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத்தோன்றினார்.
ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு சென்றன. அவற்றின் வழியாக வந்த நெல்லி மரங்கள் காலங்காலமாக இறைவனுக்கு நிழல் தந்து தொண்டு செய்யும் பாக்கியத்தை பெற்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் "நெல்லிவனநாதர்' என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய தலமும் "திருநெல்லிக்கா' என அழைக்கப்பட்டது.
தலசிறப்பு
திருவாரூரில் வாழ்ந்த சிவபக்தர் ஒருவர் இத்தலம் வந்து இறைவனை தரிசித்தார். அப்போது அங்கு கொடிய மிருகங்கள் அனைத்தும் ஒற்றுமையாய் இருப்பதையும், தேவகணங்கள் நாள்தோறும் வந்து இறைவனை தரிசித்து விட்டு பொழுது விடிவதற்கு முன் சென்று விடுவதையும் பார்த்து சோழ மன்னனிடம் தெரிவித்தார்.
சோழ மன்னன் மகிழ்ச்சியடைந்து அந்த தலத்தை பார்த்து, அங்கிருந்த காடுகளை அழித்து, நகரமாக்கி பெரிய கோயிலைக் கட்டினான். "ஆமலா' என்பது சமஸ்கிருதத்தில் நெல்லியை குறிக்கும். எனவேதான் இங்குள்ள இறை வனுக்கு ஆமலகேசன் என்ற திருநாமம் உண்டு. ஈசனுக்கு இங்கு கோயிலைக் கட்டியதால் சோழமன்னனும் பிற்காலத்தில் ஆமலகேச சோழன் என அழைக்கப்பட்டான்.
ஆமலகேச சோழனின் மகன் உத்தம சோழன். இவனது மனைவி பதும மாலை. இவர்களுக்கு நெடுங் காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இருவரும் இத்தலம் வந்து இறை வனிடம் வேண்டினார்கள். அப்போது அன்னை பார்வதியே மூன்று வயது பெண்ணாக வடிவம் கொண்டு மன்னனின் மடியில் வந்து அமர்ந்தாள். அப்போது வானில் ஒரு அசரீ தோன்றி, அம்பாளே குழந்தை வடிவில் வந்துள்ளதாகவும், அவளை "மங்களநாயகி' என பெயரிட்டு வளர்த்து வரும்படியும் கூறியது. மன்னன் அக்குழந்தையை வளர்த்து வந்தான். உத்தம சோழனின் மறைவுக்கு பின் தாயார் வளர்ப்பில் மங்களநாயகி பருவப்பெண்ணாக வளர்ந்தாள்.
ஒரு சமயம் மங்களநாயகி திருவாரூர் கோயிலில் தரிசனம் செய்து கொண் டிருந்த போது, "" வரும் ஆவணித் திங்கள் முதலாம் வெள்ளியில் திருநெல் லிக்கா வந்து உன்னை திருமணம் செய்வோம்,'' என்று இறைவனின் திருவாய் மொழி கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். ஆவணி முதல் வெள்ளியில் தேவர்கள் சூழ, வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்களநாய கிக்கு மாலை சூடி மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.
மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். பிறத்தல், தரிசித்தல், நினைத்தல், இறத்தல் முதலியவைகளால் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் புண்ணிய பயன்கள் அனைத்தும் இந்த ஒரே தலத்தில் கிடைத்து விடுவதாக தலவரலாறு கூறும்
தலமாக திகழும்
பிராத்தனை
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க திருமண தடை நீங்க சனி தோஷம் நிவர்த்தி அடைய வழிபட வேண்டிய தலம்.
அமைவிடம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள நாலு ரோடு என்ற இடத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலம் வர ஆட்டோ வசதி உள்ளது.
கோயில் Google map link
maps.app.goo.g...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9585779327
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்
Негізгі бет திருநெல்லிகாவல் நெல்லிவனநாதர் கோயில் | பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம்
Пікірлер: 15