திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் அங்குரார்பணத்துடன் தொடங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோயிலை நித்திய கல்யாணம் பச்சை தோரணம் என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ப தினந்தோறும் உற்சவமூர்த்தி களான ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இதனால் கோயில் முன்பு தினந்தோறும் மா இலை தோரணம் கட்டி நித்தியம் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏழுமலையானுக்கு தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்கள் என 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடைபெறுகிறது. இவற்றுக்கு எல்லாம் முன்பு பிரம்மதேவன் முன் நின்று நடத்தும் உற்சவமாக கருதப்படும் உற்சவம் என்பதால் இதனை பிரம்மோற்சவம் என அழைக்கப்பட்டு 9 நாட்கள் நடைபெறுகிறது. புராணங்களின்படி, சீனிவாச பெருமாள் வெங்கடாத்ரி மலையில் அவதரித்தபோது தான் தோன்றிய ஆரம்ப நாட்களில் பிரம்மாவை அழைத்து, உலக நலனுக்காக விழாக்களை நடத்த உத்தரவிட்டதாகவும் சுவாமியின் உத்தரவுப்படி பிரம்ம தேவன் சீனிவாச பெருமாள் அவதரித்த புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நிறைவு பெறும் விதமாக ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்தார். எனவே இதனை 'பிரம்மோற்சவம் என்று அழைக்கப்பட்டு, அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வருகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவம்
தமிழகத்தில் நாம் சூர்யனை மையமாக கொண்டும் , ஆந்திராவில் சந்திரனை மையமாக கொண்டு பஞ்சாங்கம் பார்க்கப்படுவதோடு கடைப்பிடிப்பது வழக்கம். இதில் மாதங்களில் செளரமானம் அடிப்படையாகவும், சந்திரமானம் அடிப்படையாகவும் கொண்டு கணக்கிடப்படுகிறது. தெலுங்கு பஞ்சாங்கம் சந்திரமான அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளதால், அமாவாசை முடிந்த மறுநாள் மாத பிறப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கிடப்படும் போது ஓர் ஆண்டிற்கு கூடுதலாக, 11 நாட்கள் வரும். அது இரு ஆண்டுகளுக்கு 21 நாட்களாக மாறும் போது ஒரு மாதம் கூடுதலாகிறது. ஆனால் 11 மாதங்களுக்கு ஒருமுறை பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகமவிதி உள்ளதால், கூடுதலாக மாதம் வரும் ஆண்டுகளில் இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26 ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று இரவு அங்குரார்பணம் நடைபெற்றது. இதில் சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனதிபதி உற்சவரை கோயில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் முன்னிலையில் கோயிலின் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் வாத்தியங்கள் முழுங்க ஊர்வலமாக செல்லப்பட்டது. பின்னர் வசந்த மண்டபம் அருகே உள்ள சுத்தமான பகுதியில் புற்றுமண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது. இந்த அங்குரர்பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்லபட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று தினந்தொறும் நவதானியங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது. இந்த நவதானியங்கள் எவ்வாறு முளைப்பாறியுடன் வளர்கிறதோ அது போன்று பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.
கொடியேற்றம் இல்லை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற்றாலும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு மட்டுமே கொடியேற்றம் இருக்கும். நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம் இருக்காது.
முதல் நாளான நாளை இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கவுள்ளார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் ( ஆதி சேஷன் ) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறவுள்ளது.
ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் , நான்கு மாடவீதி என
திருமலை முழுவதும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளும், சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தையொட்டி 3054 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளர். பழைய குற்றவாளிகள் கைரேகை மற்றும் புகைப்படம் கொண்டு அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி வெளி மாநில குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது . இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஆகம ஆலோசகர் சிறப்பு பூஜைகள் செய்து பிரம்மோற்சவத்திற்கான கங்கண கயிறுகளை கட்டினார். இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்துச் செல்ல நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை இரவு நேரங்களில் சுவாமி தாயார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.
#devotional #temple #tirupati #tirumala #balaji #templenews
Негізгі бет திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது|TEMPLE NEWS UPDATE|TIRUPATI TIRUMALA
Пікірлер