திருப்பகழின் பெருமை உணர்த்தும் திருப்புகழ்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச் சிரிப்பவர் தமக்கும்
பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம்
முருகனின் புகழை ஓதும் அடியார்களிடம் கோபம் கொண்டவர்களை முடிக்கும், அவர்களுடன் பகை பூண்டவர்களை குடிக்கும்...
சிரிப்பவருக்கும், பழிப்பவருக்கும் - திருப்புகழ் நெருப்பு என்னும் உண்மையை யாம் அறிவோம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
பிறவாமல் நிசிக்கரு வறுக்கும் நெருப்பையும் எரிக்கும்
பொறுப்பையும் இடிக்கும் நிறைப்புகழ் உரைக்கும் செயல்தாராய்
முருகனின் அடியார்கள் நினைத்ததை தரும்; மனத்தை உருக்கும்; இருண்ட கருவை அறுக்கும் (இனி பிறவாதவாறு செய்யும்)
நெருப்பையும் எரித்து அழிக்கும்; மலையையும் பொடியாக்கும்; ஆதலால் உனது நிறை புகழை உரைத்து ஓதும் திருப்பணியை எனக்கு பணித்திடுவையாக
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடுசூரர்
தனத்தன தனத்தம்... தகுத்தகு தகுத்தம் - தன - என முரசு வாத்தியம் முழங்க
தடுட்டுடு டுடுட்டுண்டு - என்ற உடுக்கைப் பறையின் முழக்கத்துடன் வந்த கொடிய அசுர்ர்ரகளையும்
சினத்தையும் உடற்சங்கரித்த மலை முற்றும்
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே
அசுரர்களின் கோபத்தை நொடிப்பொழுதில் அழித்து; அங்ஙனம் அழிப்பட்டுக் மலை போல் கிடந்த அவர்தம் உடல்களையும் உனது சிரிப்பினால் எரித்து சாம்பலாக்கிய ஒளி வேலனே !!!! திருத்தணியில் வள்ளியுடன் வீற்றிருக்கும் பெருமாளே !!! உனது புகழ் உரைக்கும் செயல் தாராய்
விளக்கவுரை - மேற்கோள் நூல் - முருகன் பன்னிரு திருமுறை - பாகம் 1 - உரை ஆசிரியர் - தணிகைமணி டாக்டர் வ. சு. செங்கல்வராயன்
Негізгі бет திருப்புகழின் பெருமை | சினத்தவர் முடிக்கும் திருப்புகழ் | sinaththavar mudikkum | with meaning
Пікірлер: 10