#திருப்புகழ் #அருணகிரிநாதர் #தமிழ்
பாடல்: கைத்தல நிறைகனி
பாடல் தொகுப்பு: திருப்புகழ்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: பாண்டிச்சேரி ப. சம்பந்தம் குருக்கள்
ஓவியம்: தியாகராஜா
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே.
பாடல் விளக்கம்: www.kaumaram.com/thiru/nnt0001...
நன்றி!!!
Негізгі бет திருப்புகழ் | கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி | அருணகிரிநாதர்
Пікірлер: 30