#திருப்புகழ் #திருச்செங்கோடு #அருணகிரிநாதர் #Thiruppugazh #Thirumurai #Arunagirinathar
காலனிடத்து (திருச்செங்கோடு)
தொகுப்பு: திருப்புகழ்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சம்பந்த குருக்கள்
......... சந்தம் .........
தான தனத் ...... தனதான
......... பாடல் .........
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
காலனிடத்து அணுகாதே ... யமனுடைய ஊரை நெருங்காத
வகைக்கும்,
காசினியிற் பிறவாதே ... இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத
வகைக்கும்,
சீலஅகத்திய ஞான ... நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ
அருளிய ஞானோபதேசம் என்ற
தேனமுதைத் தருவாயே ... தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை
எனக்கும் தந்தருள்க.
மாலயனுக்கு அரியானே ... திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே,
மாதவரைப் பிரியானே ... சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப்
பிரியாதவனே,
நாலுமறைப் பொருளானே ... நான்கு வேதங்களின் மறை
பொருளாக உள்ளவனே,
நாககிரிப் பெருமாளே. ... நாககிரியாகிய திருச்செங்கோட்டில்*
எழுந்தருளியுள்ள பெருமாளே.
-
திருப்புகழ்
Playlist from our channel:
• திருப்புகழ்
பாடல் ஒலி, வரிகள் & விளக்கம்: kaumaram.com/thiru/nnt0598_u....
நன்றி!!!
Негізгі бет திருப்புகழ் - திருச்செங்கோடு | காலனிடத்து அணுகாதே காசினியிற் பிறவாதே | அருணகிரிநாதர்
Пікірлер: 1