திருப்புகழ் 251 ஏது புத்தி (திருத்தணிகை)
பாடல் வரிகள் பதம் பிரித்து கொடுக்கப்படுள்ளது
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே
இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண
பாதம் வைத்திடு ஐயா தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டிகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர்
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரானே
Негізгі бет ஏது புத்தி திருப்புகழ் | Yedhu Budhdhi | திருத்தணிகை திருப்புகழ்
Пікірлер: 7