விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையை நிரூபித்தது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணி தொடர் வெற்றி பெற்று, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிடவும், மக்களின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும் தீவிர கவனம் செலுத்தியது. இதனால், தேர்தல் அறிவித்தவுடன், ஒரே நாளில், காலியாக இருந்த விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலரை நியமித்தும், வேட்பாளரை அதிரடியாக அறிவித்தும் களமிறங்கினர்.
அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, பன்னீர்செல்வம், ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோரை பொறுப்பாளராக நியமித்தும், 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிற அமைச்சர்களும் வந்து பிரசாரம் செய்தனர்.
தி.மு.க. தரப்பில் தாராளமாக செலவிடப்பட்டு, மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினர்.# #Vikravandi | #ByeElection | #DMK | #PMK
Негізгі бет ஓட்டு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்! Vikravandi | Bye Election | DMK | PMK
Пікірлер: 54