என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அழகான தருணம்....
கண் இல்லவிட்டாலும் கால் ஓய்ந்தாலும் உடலில் உள்ள பிறஉறுப்புகள் சிதைத்தாலும் உயிர் ஒன்று இருக்கின்றதே என்று தன் உடுக்கையின் இசையை திசை எங்கும் பரவ தீராத தாகம் கொண்ட உடுக்கை இசை கலைஞர் ஐயா ஸ்ரீ ரங்கன் அவர்களை சந்திக்க திருப்பூர் மாவட்டம் முத்தூர் தொட்டிபாளையம் பகுதிக்கு நேற்று (28/1/2022) சென்றுயிருந்தேன். இவர் பொன்னர் சங்கர் கதை பாடுவதில் பேர்போனவர். அவருடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் எந்த நிகழ்வுக்கும் போக முடியாமல் மிக வறுமையில் உள்ளார்.
இவளோ கஷ்டத்திலும் நான் கிளம்புறங்க ஐயா என்று சொல்லும் போது இருங்க அப்பிடின்னு சொல்லிட்டு எனக்கு ஒரு பழமையான ஒரு இசை பெட்டியை அன்பளிப்பாக கொடுத்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் இது உங்க கிட்ட இருந்த தான் சரியாக இருக்கும். நீங்கள் தான் இதை பரப்ப முடியும் என்றார். அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்தது.
என்னால் முடிந்தவரை நான் பரவலாக்கம் செய்வேன்😁
கலை முக்கியமா? கலைஞர்கள் முக்கியமா?
என்று என்னை கேட்டால்.
நான் கலைஞர்கள் தான் முக்கியம் என்று கூறுவேன். என்னென்றால் கலைஞர்கள் இருந்தால் தான் கலை வாழும். எனவே நம்பளால் முடிந்தவரை கலைஞர்களை பாதுகாப்போம் 🙂💯
விரைவில் காணொளி... 💯💥
#udukkai #talented #people #srirangan #soundmani #meets #udukkaiyar #rareart #poonarsankar #பொன்னர்_சங்கர் #பாடல் #உடுக்கை_அடி #உடுக்கைவகுப்பு #udukkaiclass #artistlivematter #udukkaiartist #endangeredartform
Негізгі бет Udukkai Sri Rangan | பொன்னர் சங்கர் உடுக்கை பாடல் | Soundmani | Rare art | Endangered artform
No video
Пікірлер: 89