Title:
முதல் சனிக்கிழமை மலை கோவில் சிறப்பு திருப்பலி புனித கார்மேல் மலை மாதா திருத்தலம் இளையாங்கண்ணி
Discription:
இளையாங்கண்ணி புனித கார்மேல் மலை மாதாவை நோக்கி செபம்
கன்னிமரியே கார்மேல் அன்னையே! இளையாங்கண்ணியில் இரக்கத்துடன் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் உடல் மன நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதல் தந்து அடைக்கலமாய் இருந்தருளும். உமது பேருதவியால், எண்ணற்ற நோயாளிகள் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையான பரிந்துரையில் நம்பிக்கைகொண்டு உம் திருத்தலம் நாடி வந்துள்ளோம். உம் திருமகனையும், உம்மையும் அன்பு செய்து இறைத்தொண்டர்களாக நாங்கள் விளங்கச்செய்தருளும். எங்களின் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தியருளும். அன்றாடம் துன்பங்களாலும், மனவேதனையாலும் அல்லலுருகின்றவர்களுக்கு, தாயன்புடன் அருகிலிருந்து ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளினின்று அவர்களைக் காத்தருளும். பாவச் சேற்றில் சிக்குண்டவர்கள் தூயவர்களாக மாற மன்றாடும். இதயதாழ்ச்சியும், சாந்தமுள்ள இறைமகன் இயேசுவை ஈன்றெடுத்த எங்கள் தாயே! உமது உதவியை நாடிவந்தவர் எவரையும் ஒருபோதும் நீர் கைவிடுவதில்லை. எங்களுடைய துன்ப, துயர வேளைகளில் நீர் எங்களின் அடைக்கலமாய் இருப்பீர் என்று உறுதியாய் நம்புகின்றோம். ஏனெனில் எங்களுக்கு எப்பொழுதும் ஆறுதல் அளிக்க விரைந்து வரும் விண்ணக தாய் நீரே. இம்மண்ணகத்தில் உம் மக்களாகிய எங்களின் கசிந்த கண்களையும், அவற்றிலிருந்து வழிந்தோடும் துன்ப கண்ணீரையும் கண்டு, இரக்கமுடன் எங்களை அரவணைத்துக்கொள்ளும். இறைமக்களுக்கெல்லாம் உதவி புரிந்துவரும் இளையாங்கண்ணி புனித கார்மேல் மலை மாதாவே! நீர் எல்லாம் வல்ல இறைமகன் இயேசு கிறித்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு பெற்றுத்தரக் கூடியவள் அன்றோ! எங்களை எல்லா ஆபத்துகள், விபத்துகளினின்று பாதுகாத்தருளும். எங்களை சுற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும். நாங்கள் இறையன்பிலும், பிறர் அன்பிலும் வளர்ந்திட நலமும் வளமும் அருளும். அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு சேர்ந்து இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக. ஆமென்.
இளையாங்கண்ணி புனித கார்மேல் மலை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இளையாங்கண்ணி கார்மேல் மலை மாதா திருத்தலம் வேலூர் மறைமாவட்டம்
புனித அந்தோணியார் செபம்
புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியருக்கு உகந்த ஜெபத்தை இங்கு பார்க்கலாம்.
புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே! கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக
எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார்.
திருத்தல நிகழ்வுகள்
தினந்தோறும்
• காலை 04:45 மணி 1 ஆம் திருப்பலி
• காலை 06:30 மணி 2 ஆம் திருப்பலி
• மாலை 06:00 மணி ஜெபமாலை
திருத்தல முக்கிய நிகழ்வுகள்
• மாதத்தின் முதல் சனிக்கிழமை மலைக்கோவிலில் காலை 7 மணிக்கு ஜெப மாலையுடன் சிறப்பு திருப்பலியும் குணமளிக்கும் நற்கருணை ஆசீர்வாதமும்
• மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் காலை 7:30 மணிக்கு மலைக்கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது
• மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று 6 மணி முதல் 9 மணி வரை மலைக் கோவிலில் குணமளிக்கும் ஆசிர்வாத பெருவிழா நற்கருணை ஆசீர்வாதமும் திருப்பலியுடன் நடைபெறுகிறது
திருத்தலம் பெருவிழாக்கள்
புனித கார்மேல் மாதா திருவிழா (ஆடி மாத திருவிழா)
• ஜூலை மாதம் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஜெபமாலையுடன் தேர் பவனையும் சிறப்பு நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது
• 15 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சிறப்பு திருப்பலியும் நற்கருணை தேர் பவனையும் நடைபெறுகிறது
• 16 ஆம் தேதி 7 மணி அளவில் பெருவிழா திருப்பலி நடைபெறும்
• மாலை 3 மணி அளவில் பெரிய சகடை தேர் வடம் பிடித்து ஆலயத்தை சுற்றி வலம் வரும்
• கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறும்
பாஸ்க்கு பெருவிழா
• ஒவ்வொரு ஆண்டின் உயிர்ப்பு பெருவிழா (Easter) ஞாயிற்றுக்கிழமையின் அடுத்த நாள் திங்கட்கிழமை பாஸ்க்கு பெருவிழா மற்றும் நல்ல ஆயன் ஒலி ஒளி காட்சிக்கான கொடியேற்றம் நடைபெறும்
• திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் நவநாள் திருப்பலி நடைபெறும்
• வெள்ளிக்கிழமை கார்மேல் மலை மாதா கோவில் அடிவாரத்தில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை நல்ல ஆயன் ஒலி ஒளி காட்சி நாடகமாக நடித்துக் காட்டப்படும். திருப்பலியுடன் நிறைவு பெறும்
• சனிக்கிழமை மாலை சிறப்பு தேர் பவனியும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறும்
இளையாங்கண்ணி கார்மேல் மலை மாதா திருத்தலம் வேலூர் மறைமாவட்டம்
பங்குத்தந்தை
Rev. Fr. சார்லஸ் ஜேசுதாஸ்
Contact : 9360998051
Email:charlesvellore74@gmail.com
முகவரி
🫴 Subscribe to -- KZitem channel
🫴 Like us -- Facebook
🫴 Follow us -- Instagram
🫴 📍 Location (Google map location)
Comments:
இளையாங்கண்ணி புனித கார்மேல் மலை மாதா அருளும் ஆசிறும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரையும் உடனிருந்து உங்களை காத்து வழி நடத்திக்காத்திட வேண்டுகிறோம்
Негізгі бет உயிர் காப்பாற்றிய கார்மேல் அன்னை 🥹✝️
Пікірлер: 5