அகத்தியர் தலைமையில் பதினெட்டு சித்தர்களின்ஆட்சி பூமியில் மலர தீர்மானமாகி அதனை பூமியில் காரியமாக்கும் பொறுப்பு காகபுசுன்டரின் அருளோடு போக நாதருக்கு அமைந்திட்டது. அது நிமித்தமாக போகநாதர் திரு.வேலாயுதம் அவர்களை தடுத்தாட்கொண்டு, உயிரே கடவுள் என உயிர் ஞானம் ஊட்டி உயிர் தியானம், உயிர்கலை அடங்கிய சம்மதம் உயிர் வேதம் எனும் புனிதநூலை வெளியிட அருளினார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின் இப்போது சித்தபுரி எனும் சித்தராஜ்யத்தின் தலை நகர் அமைத்திட வேதபுரி எனும் புதுச்சேரி உத்தரவாகி இருகிறது. அதன்படி புதுவையினை ஒட்டி அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதினெண் சித்தர்களின் உயிராலயம் அவர்களின் சிலைகள் பிரதிஷ்டையுடன் கூடிய உயிரணுவின் தோற்றத்திலான வேலாயுதம் மையமாக அமைக்க படவுள்ளது. அதற்க்கான இடம் உயிராலயத்தின்அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்டு உள்ளது.
பூமியில் இன்று வரை எவரும் கண்டிராத படித்திடாத கேள்வியுராத ஆதிநாத சித்தர்களின் பூரண பொக்கிஷம் எனும் உயிர்வேதம், உயிரே கடவுள் எனும் வேத மந்திரத்தை மையமாக கொண்டது.
ஒட்டு மொத்த ஆதி நாத சித்தர்களின் முழு உயிர் ஞானத்தையும் திரட்டி, உருவான பொதுவான உயிர் ஞான திரட்டு இது.
உயிர் வேதம் எதனுடனும் ஒப்பிடமுடியாதது. சித்தர்களின் நீண்ட கால தேடலாகிய பிணி மூப்பு சாக்காடு இவைகளின்தீர்வே பூரணபொக்கிஷம். முழுக்க முழுக்க மனித குலம் சந்திக்கும் மூப்பு, பிணி, சாக்காடு எனும் சரீர சாபங்களுக்கு தீர்வு அளித்துள்ளது. நம் தமிழ் சித்தர்களின் நெடும் பயணத்தின் விளைவு, பூரண பொக்கிஷம்.
நம்சித்த குலத்தின் கடும் தவத்தாலும் என் அப்பன் போகனின் கடும் தவத்தாலும் பெரு முயற்ச்சியாலும் திருவருள் சம்மதம் பெற்று இப்போது உலகுக்கு பரவிட முயல்கிறோம். திருவருள் சம்மதம் பெற்று வருவதால் இதற்க்கு சம்மதம் உயிர் வேதம் என திரு நாமம் போகநாதனால் சூட்டப்பட்டது.
சத்யம், தர்மம், இயற்க்கை, மெய்ஞானம் எனும் உயிர்ஞானம், இவைகளை உலகில் நிலை நிறுத்தி, ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்றே நினைமின், நமனில்லை நாளுமே, எனும் என் முப்பாட்டன் மூலனின் வாக்கை செயலாக்கும் வரை பசி நோக்கோம், கண் துஞ்சோம், கருமமே கண்ணாயினோம். உயிர் நம் சரீரத்தை தன் கவனத்தில் கொண்டு வரும் போது உடல் பிணிகள் அனைத்தும் மருந்துகள் ஏதும் இன்றியே அகன்று விடுகிறது.
#உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள்
Негізгі бет உயிரே கடவுள்....
Пікірлер: 11