தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
பசுபதீஸ்வரர் கோயில்
பஞ்ச பைரவர் கோயில்
ஆவூர்(கோவந்தகுடி)(84/274)
சோழ நாட்டின் காவிரித்ஸதென்கரையில் அமையப் பெற்றுள்ள 128 தலங்களுள் 21 -ஆவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.
இறைவன்:பசுபதீஸ்வரர், அஸ்வத்த நாதர், ஆவூருடையார்.
இறைவி:மங்களாம்பிகை, (இந்த அம்பிகையை குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.) பங்கஜவல்லி.
தலமரம்:அரசுமரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பொய்கை ஆறு, காமதேனு தீர்த்தங்கள்.
ஊர்: ஆவூர்
மாவட்டம்: திருவாரூர்
பசுவத்தீஸ்வரர் கோயில் பெயர், அசுவத்த வனம், மணிகூடகிரி என்கிற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கினாள்.
அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. இந்த வனத்திற்கு வந்த தேவர்கள் தங்களை, மரம் செடி கொடிகளாக மாறிக் கொண்டு அன்னையை வழிபட்டு வந்தனர்.
பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், ஜடாமுடியுடன் காட்சி தந்தார்.
எனவே, இத்தல இறைவனுக்கு கர்வதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான 'பட்டி' என்ற பசு உணர்ந்தது.
மேருமலையில் ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது.
அப்போது வாயுபகவானால் வீசியெறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடதிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது.
மாடக்கோயில் அமைப்புடன் கூடிய தலம்.
கோட்செங்கட் சோழன் திருப்பணி மாடக்கோயில்.
திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் இதுவும் ஒன்றான ஆவூர் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.
பிற சப்தஸ்தான தலங்கள்:
திருநல்லூர். கோவிந்தக்குடி, மாளிகைத் திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சை மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியன.
தல அருமை:
பொருத்தமான ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கு பஞ்சாங்கத்தைப் புரட்டி நாள், வாரம், யோகம், கரணம், திதி என்ற ஐந்தையும் காண்கிறோம்.
இந்த ஐந்தும் நமக்குச் சாதகமாக இருக்க வேண்டுமென்றால், இத்தலத்திருந்து அருள்பாலிக்கும் பஞ்ச பைரவர்களையும் வழிபாடு செய்தால் போதும்.
பைரவருக்கும், பஞ்சாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது என நினைக்கிறீர்கள்....அப்படித்தானே கேட்கத் தோனுகிறதா?.
உலக நலனுக்காக யாகம் ஒன்றைச் செய்ய தீர்மானித்தார் வசிஷ்டர்.
வேள்விக்குத் தேவைப்படும் பாலுக்காக காமதேனுவை அழைத்தார்.
அதற்கு காமதேனு தேவலோகத்தில் இருந்ததால் என்னால் உடனடியாக புறப்பட்டு வர முடியாது என்றது.
அதற்கு வசிஷ்டர்...."நீ..தெய்வப் பசு என்பதால் உனக்கு இவ்வளவு கெளரவமா?"...எனக் கோபம் கொண்ட வசிஷ்டர் அதே சினத்தோடு.....இறைத் தன்மை மிக்க பசுவான நீ"....இனி நீ இரை தேடித் திரியும் சாதாரணப் பசுவாக பூவுலகில் அலைவாயாக!"... என்று சாபமிட்டார்.
உடனடியாக அமுதமாக இருந்த உடலாலான உடல் நிலை மாறி, பசியாலும் தாகத்தாலும் தவித்து மேயப் புறப்பட்டது.
அச்சமயம் மேய்ந்து கொண்டிருந்த சாதாரணபசுவின் பக்கமாக நாரதர் வர, பசு நாதரை வணங்கியது.
அவர், அசுவத்த வனம் எனும் அரச மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்!
அங்கே, பசுபதீஸ்வரருக்கு பாலைச் சொரிந்து வழிபாடு செய்!. உன் பாவம் உன்னை விட்டு அகழ்ந்து போகும் என்றார் நாரதர்.
பசுவும் நாரதர் கூறியடியே சென்று வழிபாடு செய்தது.
வழிபாட்டில் ஈசன் காட்சி தந்து, பசுவைப் பீடித்திருந்த சாபம் விலகப் பெற்றது.
'ஆ' வாகிய பசு வழிபட்டதால் ஆவூர் ஆனது.
இறைவனும் பசுபதீஸ்வரர் ஆனார்.
தல பெருமை
பஞ்சாங்கத்தின் அங்கங்களான நாள், வாரம், யோகம், கரணம், திதி ஆகியவற்றின் அதிபதியாகத் திகழ்பவர் பைரவர்.
காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பைரவருக்கு உண்டென்பதால் காலபைரவர் எனப் பெயர் பெற்றார்.
அவரே இங்கே ஐந்து வடிவங்களில் காட்சி தருவதால் இது சிறந்த பரிகாரத் தலமாக சொல்லப்படுகிறது.
நாம் அனைவரும் நிச்சயம் ஏதாவது ஒருநாளில், ஒரு கிழமையில், யோகம், கரணம், திதியில் தான் நிச்சயம் பிறந்திருப்போம்.
பிறக்கும் பொழுது யாராலும் தோஷம் ஏதும் இல்லாத நாள் என்றெல்லாம் தேர்வு செய்து பிறக்க முடியாது.
ஆனால், எத்தகைய தோஷத்தாலும் அதிகமாக பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், அவரவர் பிறந்த நாளில் (ஆவூர்) இத்தலம் வந்து பஞ்ச பைரவரை வழிபட்டால் போதும், காலத்தைக் கட்டுப் படுத்தும் பைரவர் பம் வாழ்வில் நல்ல காலமே நிலவச் செய்வார்.
இறைவன் விளங்கும் விமானம் அழகிய மலை உச்சியைக் கொண்டுள்ளதால் மணிகூடம் என்றும் வழங்கப்படுகிறது.
பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் ஆகியோர்கள் வழிபட்டு அருள் பெற்ற தலம்.
தர்மத்துவஜன் எனும் அரசன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி குட்ட நோய் நீங்கப் பெற்ற தலம்.
நடை திறப்பு
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் வழியாக திருக்கருக்காவூர் செல்லும் வழியில் 12 கி.மீ தொலைவில் ஆவூர் அமைந்துள்ளது. பட்டீஸ்வரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கும்பகோணம், பட்டீஸ்வரம் மற்றும் திருக்கருக்காவூர் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு, பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
ஆவூர் அஞ்சல்,
(வழி) கும்பகோணம்,
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்-612 701
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
பிச்சை குருக்கள்.
94448 61548
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google map link
maps.app.goo.gl/fkeo1uyjR6B2J...
நல்லூர் பஞ்சவர்னேஸ்வரர் கோயில் தரிசனம்
• நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர...
if you want to support us via UPI id
9655896987@ibl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில் |பித்ரு தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர் | தனுசு சுப்ரமணியர் |நெற்றிக்கண் அம்மன்
Пікірлер: 20