01.10.2024 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 466 வது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டத்தில், Lakshmi Biochem, நிர்வாக இயக்குநர் திரு.பிரகாஷ், ஆனைமலை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திரு.சிவகுமார், திரு.M.சுரேஷ்குமார், மற்றும் திரு.மோகன்ராஜ், SS Event Planners திரு.செல்வகுமார், Delhi Catering திரு.வடிவேல் * ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வனப்பிள்ளையார் வழிபாடு மேற்கொண்டும், மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் APJ அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தும், மூலிகை வனத்தில் பிரியாணி இலை மூலிகை செடி நடவு செய்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். *திரு.R.மோகன்ராஜ் அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும், சிறப்பு விருந்தினர்களும், வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள், அறங்காவலர் மற்றும் தன்னார்வலர்கள் பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய அன்னம் பாலிப்பு வழங்கிய வனம் அறங்காவலர், திரு.C.பழனிசாமி அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது. இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நன்றி
TMS, வனம் ஊடகத்துறை
Негізгі бет வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் சிறப்புரை||466 வது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டம் | sky
Пікірлер