#vadapalanimurugantemple #temple #navarathri #festival #golu
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியையொட்டி அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொலுவில் அன்னை அபிராமி அலங்காரத்தில் எழுந்தருளி உள்ள அம்மனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது
வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா கோலாகலமாக துவங்ககியது.
சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. இவ்விழா நேற்று துவங்கி அக்.,4ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
சக்தி கொலு துவக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில், பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் ஆதிமூலம், துணைக் கமிஷனர் முல்லை மற்றும் பொதுமக்கள் சார்பில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு அருணின் இசைக் கச்சேரி அரங்கேறியது. முதல் நாள் கொலு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நவராத்திரி விழாவில் தினமும் மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிவரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது.
மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணிவரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது.
காலை, 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை, 6:30 மணி முதல் 7:00 மணிவரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது.
ஏக தின லட்சார்ச்சனை
நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு அக்., 2ம் தேதி, காலை 7:30 மணி முதல் மதியம்,12:30 மணிவரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு, 8:30 மணிவரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
நவராத்திரியின் நிறைவு பகுதியாக அக்.,5ம் தேதி, ‘வித்யாரம்பம்’எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
நவராத்திரி விழாவிற்கு பக்தர்கள் வருகை தந்து, சிறப்பு பூஜை, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நமது கொலு ஒவ்வொரு பொம்மைகளை பற்றியும் ஒவ்வொரு காட்சிகளை பற்றியும் தெளிவாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த மாதிரியான விளக்கங்கள் எந்த கொலு இல்லை. கொலு வைப்பதன் அர்த்தம் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பல விஷயங்கள் பல வழக்கங்கள் பல தெய்வங்கள் பல ரூபங்களில் உள்ளன. இவை முழுமையாக யாராலும் அறிந்திருக்க முடியாது இந்த விஷயங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பல தகவல்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. கொலு உள்ள பொம்மைகளை பார்க்க வரும் பக்தர்கள் இதில் எழுதப்பட்ட தகவல்களை சேர்த்து படித்தால் இதைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து, பூஜை தீபாராதனை செய்து சுண்டல் பிரசாதமாக வழங்க பட்டு வருகிறது.
தினமும் 108 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு லலிதா சஹஸரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்கள் காட்சிக்கு அருகில் பின்குரலில் கொடுக்கப் பட்டுள்ளது.
தமிழ் நாட்டிலுள்ள முக்கியமான சக்தி பீடங்களின் படம் கொலு பகுதியில் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது
தினமும் முதலில் வரும் 250 நபர்களுக்கு சுமங்கலி செட் பிரசாதமும் அம்மன் கோயில் மற்றும் முருகர் கோயில்கள் அடங்கிய புத்தகமும் கொடுக்கப் பட்டு வருகிறது.
மேலும் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு எளிதாக சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில் எந்த படியில் இருக்கிறது என்ற விவரும், தமிழ் நாட்டிலுள்ள முருகர் கோயில்கள் விவரமும் தனித்தகவலாக கொடுக்கப் பட்டுள்ளது.
வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் நவராத்திரி கொலு மிக அழகாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
தினமும் அம்மனுக்கு அந்தந்த நாளுக்குரிய அலங்காரம் செய்து மாலை 7 மணி அளவில் தீபாராதனை நடைபெற்று வருகிறது
தினசரி 108-க்கும் மேற்கொண்ட பெண்கள் மூலம் லலிதா சகஸ்ர நாம பாராயணம்
மாலை 5:30 மணி முதல் வேத பாராயணம் கொலு பாட்டு இசை கச்சேரி சொற்பொழிவு என பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது
தினமும் அனைத்து பக்தர்களுக்கும் 108 முருகன் கோயில் விவரம் அடங்கிய புத்தகம் அம்மன் கோயில்கள் விவரம் உள்ள புத்தகம் முருகர் படம் அம்மன் படம் விபூதி குங்குமம் புஷ்பம் அனைத்தும் வைத்து பிரசாதப்பை முதலில் வரும் 250 நபர்களுக்கு கொலு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமாக கையினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கந்த புராணம் வரலாறு, கீதா உபதேச காட்சி, சீதா கல்யாணம், திரௌபதி சம்ரோக்ஷணம் காமாட்சியம்மன் ஊஞ்சல், நவ துர்கை அம்மன், அறுபடை வீடு முருகன் அனைத்தும் கொலுவின் முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள முக்கியமான சக்தி பீடங்களில் சில புகைப்படங்களை இங்கே கொலுவில் புகைப்பட தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Негізгі бет VADAPALANI MURUGAN TEMPLE|பிரமாண்டமான சக்தி கொலு|NAVARATHIRI THIRUVIZHA 2022|கந்த சஷ்டி விரதம்
Пікірлер: 8