தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர் பதிகம் .
உன்னை அன்றி வேறு தெய்வம் பாடல் வரிகளுடன்.
உன்னையன்றி வேறு தெய்வம்
உள்ளம் எண்ணவில்லையே
ஓசை கொண்ட தமிழினாலே
பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையில்
அகம் குழைதல் போலவே,
அணியவேண்டும் எனது சொல்லும்
ஆதி வைத்ய நாதனே. (உ ).
தேசமெங்கும் கோயில்கள்
திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம்
கோடி நல்கும் மூர்த்திகள்
பூசை கொள்ளும் தேவதைகள்
யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலே
முன்னேற்று வைத்ய நாதனே. (உ).
ஓதும் நாலு வேதமும்,
உலாவு திங்கள் ஞாயிறும்
உகந்த கந்தவேள் சடாயு
உண்மை அன்பின் ராமனும்,
பாதபூசை செய்யவே
பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு
வாழி வைத்ய நாதனே. (உ).
ஆலகால நஞ்சை நீ
அமிர்தமாய் அருந்தினாய்
அடித்து வந்த பன்றியின்
இறைச்சியும் விரும்பினாய்,
பாலன் நஞ்சு தேடவோ?
பன்றி வேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள்
பராவும் வைத்ய நாதனே. (உ).
வாத, பித்த, சிலேட்டுமம்
வகைக்கு நூறு நோய்க்குலம்;
மனிதராசி அறிகிலாத
புதியநோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி
வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்?
கண்பாரும், வைத்ய நாதனே. (உ).
ஆயுர்வேதம், ஆங்கிலம்,
அமைந்த சித்த வைத்தியம்,
ஆனவேறு வகையிலும்
அநேகமான பத்தியம்
பாயும் நோயும் போனதோ?
பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன்என் கூட்டதோடுன்
பாரும் வைத்ய நாதனே. (உ).
அங்குமிங்கும் ஓடி என்ன?
அகலவில்லை நோய்களே
ஆடியென்ன? பாடியென்ன?
விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க,
எங்குச்செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு
வாழி வைத்ய நாதனே. (உ).
எண்ணிலாத குருடருக்குக்
கண் கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக்
கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம்
இடமில்லாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாயே
அண்ணல் வைத்ய நாதனே. (உ).
சிந்தையில் இருந்த நோய்
செயல்களால் விளைந்த நோய்
திசுக்கள், தோல், நரம்பு, எலும்பு,
குருதியில் செறிந்தநோய் .....
எந்த நோயும் போக்குவாய்
எதிர்வாராமல் ஆக்குவாய்
இசைந்நகந்த புரியிலே
அமர்ந்த வைத்ய நாதனே. (உ).
நாம, ரூப, பேதமற்ற
ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்பு செய்து
பாடுகின்றேன் வாழ்த்தியே
சாம வேத கீதனே
சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம் தஞ்சம் என்னைத்
தாங்கு வைத்ய நாதனே. (உ).
Негізгі бет vaithiyanathar pathigam | theeratha noi theerkum vaithiyanathar padal| வைத்தியநாதர் பதிகம்
Пікірлер: 170