’நீங்க எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது..’ நாங்க உங்கள செக் பண்ணனும்.. உள்ள எத்தன பேரு வரப்போறீங்க... யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை நடத்த வந்த காவலர்களை உள்ளே அனுமதிக்க சரமாரியாக கேள்விகளை எழுப்பி திடீரென ஆவேசமான பெலிக்ஸ் மனைவியால் பரபரப்பு
#Chennai | #Police | #KZitemr | #FelixGerald | #SavukkuShankar | #FelixWife | #PolimerNews
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மறைவுக்கு முன் எழுதி வைத்த இரண்டு பெயரில் தனது பெயர் உள்ளது குறித்து மு.,காங்கிரஸ் தலைவர் K.V.தங்கபாலு கொடுத்த பகீர் விளக்கம்
#Nellai | #Chennai | #Congress | #Death | #Selvaperunthagai | #KVThangkabalu #PolimerNews
#life
யார் மனதையும் புண்படுத்தும்படி பேசமாட்டேன்
#SavukkuSankar | #savukkumedia | #Chennai | #TNPolice | #Theni | #News7Tamil | #News7TamilUpdates
இளமாறன் இன்று ஒரு ரயிலின் படத்தை வரைந்து காட்டினான். அந்த ரயில் என்னுடைய சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்திவிட்டது.
மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பறந்து கொண்டிருந்தது மும்பை எக்ஸ்பிரஸ். அதன் ரிசர்வேஷன் பெட்டி ஒன்றில் நான் `உங்கள் ஜூனியர்’ படித்தபடி அமர்ந்திருந்தேன்.
வண்டி பூனேவை தாண்டி சோலாப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மையமாக இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம் அது. அப்போதுதான் அந்த பாடகனின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது..
``பர்தேஷி.. பர்தேஷி.. ஜானா நஹி.. ” என்ற அந்த பாடலைப் பாடிய அந்த குரல் ஒருமாதிரி குழந்தைத்தனமாக இருந்தது.
பின்னணி இசையாக இரண்டு சிமெண்டு ஓட்டின் `டிக் டக் டிக்’ சத்தம். என் இருக்கையிலிருந்து எட்டிப்பார்த்தேன்.
வெறும் டவுசர் மட்டும் அணிந்திருந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.
அழுக்காக இருந்தாலும் அழகாக இருந்தான். அந்த குழந்தையின் குரலுக்கு பின்னணி இசைக் கொடுத்தது இன்னொரு குழந்தையான அவனது சகோதரி. அவளும் கிழிந்த பாவாடைச் சட்டை அணிந்திருந்தாள். அவளுக்கு ஒரு பத்து வயது இருக்கலாம்.
அந்த சிறுவன் ``பர்தேஷி.. பர்தேஷி.. ஜானா நஹி.. ” என்ற வரிகளையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். முழுப் பாடலையும் அவன் பாடவில்லை என்றபோதிலும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது அவனின் குரல்.
சில இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வேறு பாடலை பாடச்சொல்லி பணம் கொடுத்தார்கள். அவன் மீண்டும் மீண்டும் ``பர்தேஷி ஜானா நஹி..’’ என்றே பாடினான்.
நானும் கையிலிருந்த சில்லறையை கொடுத்தேன். எனது இருக்கை தான் அந்த பெட்டியின் கடைசி இருக்கை என்பதால் என்னைக் கடந்து சென்றவர்கள் வாசலை ஒட்டி அமர்ந்துக் கொண்டார்கள்.
வாசல் வழியாக உள்ளுக்குள் நுழைந்த வெளிக்காற்று அந்த குழந்தைகளின் முகத்தில் மோதி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
குஷியாக அக்காவும் தம்பியும் ஓயாது பேசிக்கொண்டே இருந்தார்கள். இடையில் வந்த வியாபாரியிடம் ஆளுக்கொரு சமோசாவும் வாங்கி சாப்பிட்டார்கள்.
பின்னர் தங்களுக்குக்குள் விளையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை என்பதால் அந்த குழந்தைகளை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
மற்றொரு வாசல் பக்கம் ஒரு பெரியவர் நின்று கொண்டும், இளைஞர்கள் இருவர் கால்களை தொங்கப்போட்டபடி காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றியதால் எழுந்து கழிவறையை நோக்கி அடியெடுத்து வைத்தேன்.
அப்போதுதான் அது நடந்தது. அக்காவுடனான விளையாட்டு உற்சாகத்தில் சிரித்தபடியே பின்னால் நகர்ந்தான் சிறுவன். அவ்வளவுத்தான்.. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. எங்கள் கண் முன்னால் அந்த பச்சிளம் சிறுவன் திறந்திருந்த வாசல் வழியாக வெளியே விழுந்தான்.
கடும் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் சத்தத்தினூடாக`சடக்’ என்ற சிறு சத்தம் மட்டுமே கேட்டது.
அடுத்தகணம் கண்ணில் பீதியுடன் அந்த சிறுமி வாசலை எட்டிப்பார்த்து மார்ப்பில் அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் வாசலுக்கு ஓடிச் சென்று எட்டிப்பார்ப்பதும்.. பின் திரும்பி வருவதுமாக... பையா.. பையா.. என்று கதறியபடியே இருந்தாள்.
அதுவரை தன் குரல்களால் எங்களை மகிழ்ச்சிப்படுத்திய அந்த குழந்தை எங்கள் கண் முன்னால் ரயிலிருந்து வெளியே விழுந்த அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தோம்.
அப்போதுதான் தோன்றியது.. அந்த சிறுமியும் வெளியே பாய்ந்துவிட்டால்.. உடனடியாக அந்த சிறுமியை கையைப் பிடித்து இழுத்து வாசலை விட்டு நகர்த்தி கொண்டு வந்தேன். இதற்குள் வண்டி குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டரைக் கடந்திருந்தது.
ஃபைன் கட்ட வேண்டி வரும் என்று நினைத்தார்களோ என்னவோ.. யாருக்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்த வேண்டும் என்று தோன்றவில்லை.
எனக்கும் அந்த பயம் இருந்தது.. ஆனாலும் ரயில்வேக்காரனின் பிள்ளை என்று கூறி டிடிஆரிடம் சமாளித்துக் கொள்ளலாம் என்று சங்கிலியைப் பிடித்து இழுத்தேன்.
வண்டி முழுமையாகக் கூட நிற்கவில்லை.. அந்த சிறுமி ஓடும் ரயிலிருந்து இறங்கி தன் தம்பியைத் தேடி பெருங்குரலெடுத்து கதறி அழுதபடியே அந்த இருளில் ஓடினாள்.
பெரியவர்கள் படித்தவர்கள் பலர் இருந்தும் அந்த சிறுமியின் பின்னாள் அந்த இருளில் யாருக்குமே போகத் தோன்றவில்லை.
அடுத்த நிமிடங்களில் ``யார் வண்டியை நிறுத்தியது..” என்று கேட்டபடி வெள்ளை உடை அணிந்த ஒருவரும் போலீஸ்காரர் ஒருவரும் வந்து விசாரித்தார்கள். பிச்சைக்கார சிறுவன் ஒருவன் விழுந்துவிட்டான். அவன் சகோதரி அவனை தேடி போயிருக்கிறாள் என்று சொன்னார்கள்.
``பிச்சக்காரங்களா.. சரி.. பக்கத்து ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிருவோம்.. அவங்க வந்து பார்த்துக்குவாங்க..” என்று கூறிவிட்டு அவர்கள் வண்டிக்கு சிக்னல் கொடுத்தார்கள்.
சக ரயில் பயணி ஒருவர் விழுந்திருந்தால் இப்படி விட்டுவிட்டு பயணித்திருப்பார்களா.. ஆள் நடமாட்டமில்லாத அந்த காட்டு இருளில், தண்டவாளத்தில் தன் தம்பியைத் தேடிப்போன அந்த சிறுமிக்கு அ
Негізгі бет வயலு பாம்பு
Пікірлер