நீட் மோசடி செய்தவர்களை
கண்டுபிடிக்க முடியுமா?
மறுதேர்வு கடைசி ஆப்ஷன்
இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது. 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், மறு தேர்வு நடத்த கோரியும் மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நீட் வழக்கு தொடர்பான 38 மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் வாதிடும்போது, நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை முழுமையாக கண்டறிய முடியாது. அவர்களை தனியாக பிரிக்க முடியாது. எனவே மறு தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.
மத்திய அரசு பதில் அளித்தபோது, வினாத்தாள் கசிவை ஒப்புக்கொண்டது. ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவால் பலனடைந்த மணவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என தெரிவித்தது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.
தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதை விரும்பவில்லை.
அவர்களில் பலர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தேர்வு மையங்களுக்கு செல்ல தேவையில்லாமல் பணம் செலவழிக்க முடியாது. மறு தேர்வு என்பது கடைசி ஆப்ஷன் தான்.
வினாத்தாள் கசிந்ததும், தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டதும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகி உள்ளது.
கசிவின் தன்மையைதான் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சோஷியல் மீடியாக்கள் மூலம் வினாத்தாள் கசிந்து இருந்தால் அது காட்டுத்தீ போல் பரவியிருக்கும்.
முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகம். அதில் எத்தனை பேர் கருணை மார்க்கால் பயன் அடைந்தனர்?#Neet #Supremecourt #Neetexam #CBI
Негізгі бет வினாத்தாள் கசிவு விவரங்கள் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Neet | Supreme court | Neet exam
Пікірлер: 27