#Kubotaindia #Agriculture #indianfarmer
2016 வரை J. சதீஷ் அவர்கள் விப்ரோ நிறுவனத்தில் ஓர் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். வேலை சிறப்பாக இருந்தாலும், விவசாயம் மீது தனக்கிருந்த ஆர்வத்தாலும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் வேலையை விட்டுவிட்டு தன் பூர்வீகமான சத்தியமங்கலம் பகுதிக்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டார். முதலில் பல தடைகள் மற்றும் நஷ்டத்தை சந்தித்தார். பிறகு, விவசாயத்தில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையால் பல விவசாயிகள் கஷ்டப்படுவதை கவனித்து, அவர்களுக்கு சேவை வழங்கும் வகையில் குபோட்டா டிராக்டர் ஒன்றை வாங்கினார். இன்று அது படிப்படியாக 5 டிராக்டர்களாக வளர்ந்து இருக்கிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் களை எடுப்பது முதல் அறுவடை செய்வது வரை அவரின் விவசாய வாகனங்கள் பிற விவசாயிகளுக்கு பயனளித்து வருகின்றன.
குபோட்டா டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் பற்றி மேலுமறிய: 9500126356 / 9384003139 | www.kubota.co.in
Негізгі бет விவசாயிகளுக்கு டிராக்டர் சேவை வழங்கும் முன்னாள் ஐடி ஊழியர் |
Пікірлер: 22