Join this channel to get access to perks:
/ @melmaruvathursiddharp...
யோகம் பெற யாகம்! என்பது அன்னையின் அருள்வாக்கு. நாம் எல்லோரும் வீட்டிலேயே நாமே எளிய முறையில் யாகம் செய்து எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ 16.06.2020 அன்று அன்னை அருள்வாக்கில் எளிய ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த வேள்வியினை செய்ய அருளியுள்ளார்கள்.
இந்த வேள்வியினை அமாவாசை தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் செய்ய வேண்டும்.
வருகின்ற 20.06.2020 அமாவாசை - அன்று இந்த வேள்வியினை செய்யலாம்.
வீட்டில் வேள்வி செய்ய தேவையான பொருட்கள்:
செப்பு யாக குண்டம் (மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் கிடைக்கும்)
தாம்பாள தட்டு - 1
மணல் - சிறிதளவு
களி மண் - சிறிதளவு
அகல் விளக்கு, எண்ணெய், திரி
அரிசி மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - யாக குண்டத்தில் உள்ளே ஓம் வரைவதற்காக
மஞ்சள் குங்குமம் - யாக குண்டத்திற்கு பொட்டு வைப்பதற்காக
திருஷ்டி கழிக்க எலும்மிச்சை பழம் - 2
யாகத்தில் இடுவதற்கான ஆகுதி பொருட்கள்:
1. கற்பூரம்
2. நல்லெண்ணை
3. சமித்துக்குச்சிகள்
4. நவதானியம் - சிறிதளவு
5. அடுப்புக்கரி -7 துண்டுகள்
6. எலும்மிச்சம் பழம் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
7. வெண்பூசணிக்காய் -சிறிதளவு (7 துண்டுகளாக நறுக்கியது)
8. ஊமத்தங்காய் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
9. தேங்காய் - 7 சிறிய துண்டுகள்
வேள்வி குண்டம் தயார் செய்யும் முறை:
1.வீட்டின் பூசை அறையில், தாம்பாளத் தட்டை வைத்து, அதன் மீது மணலை பரப்பிக்கொள்ள வேண்டும்.
2.சித்தர் பீடத்திலிருந்து பெறப்பட்ட செப்பு யாக குண்டத்தினை அதன்மீது வைத்து களி மண்ணை பிசைந்து செப்பு யாக குண்டத்தின் மீது பூசவும்.
3.செப்பு யாக குண்டத்தின் உள்ளே மணலைப் பரப்பவும். அதன் மீது அரிசி மாவு தூவி, மஞ்சள் பொடியினால் ‘ஓம்’ என எழுதவும். விருப்பப் பட்டால் யாக குண்டத்தின் மேல் வண்ணப் பொடிகள் கொண்டு அலங்கரிக்கலாம்.
4. யாக குண்டத்திற்கு மஞ்சள் குங்குமத்தால் நான்கு பக்கங்களுக்கும் பொட்டு வைக்கவும்.
5. யாக குண்டத்தில் முன்பு அகல் விளக்கு ஏற்றி வைக்கவும்.
வேள்வி செய்யும் முறை:
யாக குண்டத்திற்கு, ஓம்சக்தி! பராசக்தி! சொல்லி தீபாரதனை செய்து, எலும்மிச்சை பழம் கொண்டு திருஷ்டி கழிக்கவும்.
முதலில் கற்பூரம் ஏற்றி யாக குண்டத்திலிட்டு,
சமித்துக்குச்சி, நல்லெண்ணை, நவதானியம், அடுப்புகரி துண்டுகள், ஊமத்தங்காய் துண்டுகள், எலும்மிச்சை பழத்துண்டுகள், வெண் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் தேங்காய் துண்டுகள் என்ற வரிசையில் ஆகுதி பொருட்களை வேள்வித் தீயில்
“அம்மா ஆதிபராசக்தி தாயே ! நீயே துணை ! தீமைகளை ஒழித்து நன்மையை தருவாயாக” என மனமுறுகி வேண்டி இட வேண்டும்.
இந்த யாகத்தின் போது பின் வரும் வரிசையில் மந்திரங்களை படிக்க வேண்டும்.
1. மூலமந்திரம்
2. மழை வேண்டல்
3. 108 போற்றி திருவுரு
4. வாழ்த்து
5. இயற்கை தரும் நன்மையை தியானத்தில் நினைத்தல், தாய், தந்தை , குரு, ஆதிபராசக்தி மனதில் வணங்குதல்.
வேள்வியின் முடிவில் யாக குண்டத்திற்கு தீப ஆராதனை செய்து எலும்மிச்சை பழம் கொண்டு செய்த திருஷ்டி கழிக்க வேண்டும்.
வேள்வி முடிந்த பின்னர்:
1. சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து பூசை அறையில் வைக்கவும். பிறகு அந்த சாம்பலை ஓடும் தண்ணீரில் விட்டு விடவும்.
2. யாக குண்டம் சூடு தணிந்தவுடன் செப்பு யாக குண்டத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிறகு அடுத்த அமாவாசையில் உபயோகித்தல் வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னை அருளிய முறைப்படி யாகம் செய்து யோகம் பெறலாம்.
வீட்டில் வேள்வி செய்ய செப்பு யாக குண்டத்தை பெறுவதற்கு தொடர்பு கொள்ளவும்:
www.omsakthiamma.org/ (or)
மகளிர் அறநிலை - 044 27529199 (or)
மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனல் அலுவலக எண்: +91 9499934904
You can also visit the official website
omsakthiamma.org/
bangaruadigalar.org/
You can also follow us on other Social Media
Facebook: / melmaruvathursiddharpe...
Instagram: / melmaruvathur_siddhar_...
Twitter: / siddharpeedam
#Havan #BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur
Негізгі бет யோகம் தரும் யாகம்! | வீட்டில் யாகம் செய்வது எப்படி? | செய்முறை விளக்கம்
Пікірлер: 183