Arulmigu Angalamman Temple, Melmalaiyanur
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் இருந்து 20 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 32 கிமீ, தொலைவிலும் மேல்மலையனூர் என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.. இத்திருக்கோயிலில் அன்னை அங்காளம்மன் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய திருத்தலம். மேலும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தினை கண்டால் எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா மிகவும் சிறப்பானது. பக்தர்கள் தங்கள் நிலங்களில் பயிர் செய்யும் பல்வேறு வகையான தானியங்கள், காய்கறிகளை சூறையிடுவார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர், அமாவாசையன்று இரவு தங்கி, அம்மனின் ஊஞ்சல் உற்நச சேவையை தரிசித்தால், எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
Пікірлер