Art of Nature
" மனதில் பல துன்பங்கள்இருந்தாலும் சாரலோடு
மழையில் நனையும் போது
துன்பங்கள் கூட சந்தோசமாக
மாறி விடுகிறது "
" வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது "
" இயற்கையின் அருமை
புரியாமல் மனிதனே
மனிதனுக்கு எமனாக
மாறுகிறான் இயற்கையை
காப்போம் "
" கோபங்கள் சீற்றங்கள்
மனிதனுக்கு மட்டும் அல்ல
இயற்கைக்கும் உண்டு "
" நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும் "
" தனக்கென பாராமல் பிறரை
மகிழ்விப்பது இயற்கை தான்
செயற்கைக்காக அதனை அழிப்பது
மனிதன் செய்யும் பாவம் "
" கடல் அலைகளுக்கு எவ்வளவு
அன்பு கரைகள் மீது
ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன "
" நீலவான மாளிகையில்
வெள்ளை நிற
தேவதை நிலா "
இதைபோல் ஏராளமாக சொல்லலாம் இயற்கை பற்றி,
செயலில் செய்வதும், செயல்பாட்டில் நடைமுறைப்படுத்துவதும் கடினம்.
#nature #Travel #animals #bird's #plants #greenzone
#naturequotes #naturelovers #naturephotography #naturevideography
Save Nature's and Save 🌎
Пікірлер