List of other padhigam classes: thevaramclass....
Odhuvar:
தர்மபுரம் சுவாமிநாதன் - Dharmapuram Swaminathan: ??
கோ.ப. நல்லசிவம் - G.P. Nallasivam: • 4.62 - நான்காம் திருமு...
M.S. Subbulakshmi (Song-1 only): • Vediya Veda Gita (Thev...
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - (திருநேரிசை)
tirunāvukkarasar tēvāram - 4.62 - tiru-ālavāy (madurai) - (tirunērisai)
இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
thevaramclass....
Verses of this padhigam are available in the above URL.
V. Subramanian
#thevaram #thevaramclass #thirunavukkarasar #appar #தேவாரம் #தேவாரவகுப்பு #திருநாவுக்கரசர் #அப்பர்
--------------
Word separated:
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 405
சீர் திகழும் பாண்டி மாதேவியார், திருநீற்றின்
சார்வு அடையக் கூன் நிமிர்ந்த தென்னவனார் தம்முடனே,
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர் தமைப் பணிவுற்று
ஆரகிலாக் காதல் மிக, அடி-போற்ற அங்கு இருந்தார்.
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 406
திரு-ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச், செழும்பொருள்-நூல்
தருவானை, நேரிசையும் தாண்டகமும் முதலான
பெரு-வாய்மைத் தமிழ் பாடிப், பேணு திருப்பணி செய்து,
மருவார்தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்,
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - ( திருநேரிசை )
(அறுசீர் விருத்தம் - meter)
பாடல் எண் : 1
"வேதியா; வேத கீதா; விண்ணவர் அண்ணா;" என்று என்று
ஓதியே மலர்கள் தூவி, ஒருங்கி நின் கழல்கள் காணப்,
பாதி ஓர் பெண்ணை வைத்தாய், படர்-சடை மதியம் சூடும்
ஆதியே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 2
"நம்பனே; நான்முகத்தாய்; நாதனே; ஞான மூர்த்தீ;
என் பொனே; ஈசா;" என்று என்று ஏத்தி, நான் ஏசற்று என்றும்
பின்-பினே திரிந்து, நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்,
அன்பனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 3
ஒரு-மருந்து ஆகி உள்ளாய்; உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு-மருந்து ஆகி நின்றாய்; பேர்-அமுதின் சுவையாய்க்
கரு-மருந்து ஆகி உள்ளாய்; ஆளும் வல்-வினைகள் தீர்க்கும்
அரு-மருந்து ஆலவாயில் அப்பனே; அருள்-செயாயே.
பாடல் எண் : 4
செய்ய நின் கமல-பாதம் சேருமா, "தேவர் தேவே;
மை-அணி கண்டத்தானே; மான்-மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே", சால ஞானம் கற்றறிவு இலாத நாயேன்,
"ஐயனே; ஆலவாயில் அப்பனே", அருள்-செயாயே.
பாடல் எண் : 5
வெண்-தலை கையில் ஏந்தி, மிகவும் ஊர் பலி கொண்டு, என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்;
பண்டு உனை நினைய-மாட்டாப் பளகனேன் உளமது ஆர,
அண்டனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 6
"எஞ்சல்-இல் புகல் இது" என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி, மலரடி காணும் வண்ணம்,
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே, நாயேற்கு
"அஞ்சல்" என்று ஆலவாயில் அப்பனே அருள்-செயாயே.
பாடல் எண் : 7
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு-மலர்ப்-பாதம் காணத், தெண்-திரை நஞ்சம் உண்ட
குழகனே, கோல வில்லீ, கூத்தனே, மாத்தாய் உள்ள
அழகனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 8
நறு-மலர் நீரும் கொண்டு, நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்,
செறிவன சித்தம் வைத்துத், திருவடி சேரும் வண்ணம்,
மறி-கடல் வண்ணன் பாகா, மா-மறை அங்கம் ஆறும்
அறிவனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 9
நலம் திகழ் வாயின் நூலால் சருகு-இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசது ஆள அருளினாய் என்று, திண்ணம்
கலந்து உடன் வந்து, நின் தாள் கருதி நான் காண்பதாக
அலந்தனன், ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 10
பொடிக்கொடு பூசிப், பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்க-மாட்டேன்;
எடுப்பன் என்று இலங்கைக்-கோன் வந்து எடுத்தலும், இருபது தோள்
அடர்த்தனே; ஆலவாயில் அப்பனே; அருள்-செயாயே.
=====
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
12.21 periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - # 405
sīr tigaḻum pāṇḍi mādēviyār, tirunīṭrin
sārvu aḍaiyak kūn nimirnda tennavanār tammuḍanē,
pār paravum kulacciṟaiyār vāgīsar tamaip paṇivuṭru
āragilāk kādal miga, aḍi-pōṭra aṅgu irundār.
12.21 periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - # 406
tiru-ālavāy amarnda señjuḍaraic, ceḻumboruḷ-nūl
taruvānai, nērisaiyum tāṇḍagamum mudalāna
peru-vāymait tamiḻ pāḍip, pēṇu tiruppaṇi seydu,
maruvārdam puram erittār pūvaṇattai vandu aḍaindār,
--------------
tirunāvukkarasar tēvāram - padigam 4.62 - tiru-ālavāy (madurai) - ( tirunērisai )
(aṟusīr viruttam - meter)
pāḍal eṇ : 1
"vēdiyā; vēda gīdā; viṇṇavar aṇṇā;" eṇḍru eṇḍru
ōdiyē malargaḷ tūvi, oruṅgi nin kaḻalgaḷ kāṇap,
pādi ōr peṇṇai vaittāy, paḍar-saḍai madiyam sūḍum
ādiyē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 2
"nambanē; nānmugattāy; nādanē; ñāna mūrttī;
en ponē; īsā;" eṇḍru eṇḍru ētti, nān ēsaṭru eṇḍrum
pin-pinē tirindu, nāyēn pērttu inip piṟavā vaṇṇam,
anbanē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
For remaining verses: thevaramclass....
=====
Негізгі бет 4.62 - வேதியா வேத கீதா - vEdhiyA vEdha geedhA - (தேவார வகுப்பு)
Пікірлер: 9