#திருமந்திரம் #thirumanthiram #திருமூலர் #thirumoolar #சைவம் #saivam
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்ப்பொருளியல் நூல் வகையைச் சேர்ந்தது. "சிவமே அன்பு, அன்பே சிவம்" எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரம், பாயிரமும் அதனை அடுத்து ஒன்பது உட்பிரிவுகளும் (தந்திரங்களும்) கொண்டது. கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் நூல் அமைந்துள்ளது.
திருமூலர் வாக்குப்படி 3000 பாடல்கள். இருப்பினும் கூடுதலாக 50-100 பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை பின்னாளில் சேர்ந்த இடைச்செருகல்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நமக்குக் கிடைத்த திருமந்திரப் பாடல்களில், நிறைய எழுத்துப்பிழை, சொற்பிழை காணப்படுகின்றது. Reputed sitesல் கூடுமானவரை அவற்றை சரிபார்த்து பாடல் வரிகளை இந்தக் காணொளிகளில் சரி செய்திருக்கிறோம்.
இந்தக் காணொளியில், ஒன்பதாம் தந்திரத்தில் இருந்து பாடல்கள் 3009 முதல் 3047 வரை பார்க்கலாம்/கேட்கலாம்.
இத்துடன் அனைத்துத் தந்திரங்களும் நிறைவு பெறுகின்றன.
Full playlist: • திருமந்திரம் முழுதும் ...
நன்றி!
கரு. சண்முகா
🙏🙏🙏
Негізгі бет 49 திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் (7/7) | Thirumanthiram Songs 3009 to 3047
Пікірлер: 2