அகஸ்தியர் ஞானம் 2
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா:
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா:
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா:
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.
உயர் ஞானம்
2. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்.
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு:
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்: தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு: மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
தனிஞானம்
3. ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு: பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு வாச்சு:
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே:
4. விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும்:
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய்:
சந்தேக மில்லையடா புலத்தி யன்னே! சகலகலை ஞானமெல்லா மிதற் கொவ்வாவே:
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம்பாரே.
5. மூலமதை யறிந்தக்கால் யோகமாச்சு: முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு:
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்: சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்:
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞாலமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே:
Негізгі бет அகஸ்தியர் ஞானம் 2
Пікірлер: 15