அதம்பார் கோதாண்ட ராமர் கோயில்
மூலவர்: ராமர்
தாயார்: சீதா
ஊர்: அதம்பார்
மாவட்டம்: திருவாரூர்
எத்தனையோ ராமர் கோவில்கள் இந்தியாவில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து ராமர் கோவில்கள் அதி விசேஷமானவை. அவை பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் எனப்படும். அவற்றில் ஒன்று தான் அதம்பார் கோதண்ட ராமர் ஆலயம். மற்ற நான்கு ராம க்ஷேத்ரங்கள்: தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) என்னும் ஊர்களில் இருக்கும் ராமர் ஆலயங்கள்.
தலவரலாறு
சீதையிடம் இருந்து ராமனை பிரிக்க மாரீசன் பொன்மான் உருவில் தோற்றமளித்து வந்தான். அம்மானின் தோற்றத்தில் மயங்கிய சீதா அந்த மானைப் பிடித்து தரும்படி ராமனிடம் கூற அவரும் சீதையின் முகம் வாடி விடக் கூடாதென மானை பிடிக்கச் சென்றார். அது மான் கிடையாது மாரீசன் என்று தெரிந்தவடன் ராமன் அம்பை எய்தினான். அந்த இடமே இந்த அதம்பார் தலம்.
பொது தகவல்
ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் அருகே அருகே இங்கு இருக்கின்றன. உதாரணமாக
அதம்பார் : (ஹதம் பார்) - ராமர் பொன்மானாக வந்தது மாரிசன் என்ற ராக்ஷஸன் என்று தெரிந்து அவனை ''ஹதம் செய்கிறேன் பார் '' என்று சொல்லியது தான் இப்போது அதம்பார்.கொல்லுமாங்குடி - மாரிச்ச மானை கொன்றது (கொல்லு மான் குடி) நல்லமாங்குடி -- சீதைக்கு மாரிச்சன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் ''நல்ல மான் குடி'' வலங்கை மான் : ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரிசன் வலப்பக்கமாக ஓடியது ''வலம் கை மான்'' -- சோத்து கை பக்கம் சென்னை பாஷையில்.
பாடகச்சேரி -- ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரணமாகிய பாதகத்தை கீழே எறிந்தது ''பாடக சேரி'' தாடகந்தபுரம் : தாடகை ராமனிடமிருந்து லக்ஷ்மணனிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்த புரம். இது போல் ராமர் சம்பந்தப்பட்ட ஊர்கள் ஏகப்பட்டது இருக்கிறது.
தல சிறப்பு
17ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அதம்பார் கோதண்டராமஸ்வாமி கோவில் புதுசாக இருக்கிறது. 2002ல் ஸ்ரீ க்ரிஷ்ணப்ரேமி வந்து புணருத்தாரணம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் ஆகியிருக்கிறது. வைகானச ஆகம முறை வழிபாடு. ரங்கநாதர் ஆலயம். அனால் ராமர் கோவில் என்றால் தான் எல்லோருக்கும் தெரிகிறது. கோதண்ட ராமர் இங்கே வடுவூர் ராமன் போலவே அழகன். கிழக்கே பார்த்து அருள் பாலிக்கிறார். ராமர், சீதை, லக்ஷ்மணன், ஹனுமான். மாரீச மான் காட்சி அளிக்கிறார்கள். ரங்கநாயகி தாயார் ரங்கநாதர் சந்நிதி இருக்கிறது. குட்டியாக கருடாழ்வார் சந்நிதியும் பிரகாரத்தில் பார்க்கலாம்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள கடகம்பாடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கடகம்பாடி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அதம்பார் செல்ல ஆட்டோக்கள் உள்ளது.
ஆலயம் தொலைபேசி எண்
+919751217461
+91 8012892241
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google Map link
maps.app.goo.gl/qTu86PXDEESFW...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет அதம்பார் கோதாண்ட ராமர் | திருமண தடை நீக்கும் கல்யாண ரங்கநாதர் | அமர்ந்த கோலத்தில் ரங்கநாதர்
Пікірлер: 7