அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் 110
அவனிதனிலே பிறந்து , மதலை எனவே தவழ்ந்து ,
அழகு பெறவே நடந்து , இளைஞோனாய் ,
அருமழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று ,
அதிவிதம் அதாய் வளர்ந்து, பதினாறாய்,
சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகுகவலை யாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு, மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகாதேவர்
மனமகிழவே அணைந்து, ஒரு புறம் அதாக வந்த
மலைமகள் குமார ! துங்க வடிவேலா !
பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து,
படி அதிரவே நடந்த கழல்வீரா !
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து ,
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே
Негізгі бет அவனிதனிலே பிறந்து திருப்புகழ் பாடல் 110 விளக்கம்
Пікірлер: 25