கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரமுடைய ஐயர்மலை என்ற இந்த மலை கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் உள்ளது. குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இம்மலையில் அருள்மிகு சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மலைக்கோயிலை சென்றடைய அடிவாரத்திலிருந்து 1017 படிக்கட்டுகள் வழியாக சென்றாக வேண்டும். பொன்னிடும்பாறையருகே துவங்கும் படிக்கட்டுகள் சப்தகன்னிமார் கோயில் வரை கிட்டத்தட்ட செங்குத்தாகவே செல்லுகிறது. அதன் பிறகு சற்று எளிதாக ஏறும் வகையில் உள்ளது. இந்தக் காணொலியில் முதல் பகுதியாக இரத்தினாச்சலம் என்ற இந்த ஐயர்மலையின் அடிவாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் முதல் மலைப்பாதையில் சரிபாதி தொலைவில் இருக்கும் வசந்த மண்டபம் அதாவது ஒன்றில் பாதி என்ற பகுதி வரை உள்ள அதிசயங்களை காணும் வகையில் இக்காணொலி உருவாக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மலையின் மீதி பகுதி இரண்டாம் பகுதியாக விரைவில் வெளிவரவுள்ளது
Негізгі бет #Ayyaramalai
Пікірлер: 106