ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி! *48 நாள் சிவ வழிபாடு- 47 ஆம் நாள்* எச்செயல் ஆற்றினாலும் ஆன்மா என்பது உருகிக் கரைந்து விண்ணேறிடவே முனைந்திருக்கும். கலி எல்லையில் *அறிவின் உச்சத்தை அடையும் தருணம் உணர்வு அலைகளைப் பெருக்குவதற்கு என்றே உருகிய அணுக்களும் அபூர்வமான செயலாக, ஒளியாய் பிறப்பினை மீண்டும் அடையும்* அறியாமைத் திரைகள் எனும் கழிவுகளால் நிறைந்துள்ள மானுடர்கள் *தங்களது சிவத்துளிகளைக் கொண்டே முக்தி பேறுதனை பெற்றுவிட இறைவனால் நிகழ்த்தப்படும் ஓர் பேரியக்கமே சிவலிங்க ரூப வழிபாடுகளாகும்*. அன்பு மானுடர்களே! *மகாசிவராத்திரி எனும் அற்புத இயற்கை காலத்தின் மூலம் உயர்வான உருகிய நிலையினை ஒவ்வொரு ஆன்மாவும் இயற்கையாகவே ஈட்டிட இயலும்.* மேலும் உருகிய ஆன்மத்துளிகளை சிவரூபமாய் ஏற்றிட்டால் பற்பல உணர்வுநிலைகளும் சித்திக்கும். 47 ஆவது தினமதிலே உருகியே உட்கலக்கவுள்ள இரு பிரம்மாண்ட சிவத்துளிகளாக *இப்புவியின் ஓர் உன்னத சக்திநிலை தேக்கத்தின் ஆற்றல்களை உள்ளடக்கிய ஸ்ரீகைலாயநாதரும் விண்ணுலகில் ஓர் அற்புத சக்திநிலைகள் அடங்கிய ஆற்றல்களை உள்ளடக்கிய ஸ்ரீசிவலோகநாதரும் ஆன்ம ஒளியாய் உருகி, உயிரோடு கலந்து இயக்கத்திற்கு ஆட்படுவர்.* உருகிய ஒளியாய் வெளித்தோன்றும். இவ்விரு துகள்களும் உயிரோடும் உடலோடும் கலப்புற்றால் *1.இப்புவியின் அனைத்து உன்னத நிலைகளும் உணரப்படும்*. மேலும் *2.சிவலோகம் எனும் சக்திநிலையின் உச்சமும் அறிவினால் உணரப்படும்*. *3.வ்வொரு அறிவு அணுக்களும் உருகிய ஆன்மரசத்தை ஏற்கும் தருணம் ஏதுமின்றிக் கரையும்.* ஸ்ரீகைலாயநாதரும் ஸ்ரீசிவலோகநாதரும் சிவபூஜையை ஏற்றுள்ள அகத்தியரின் சீடர்களின் சிரசினில் ஒளியாய் கரைந்து உட்புக யாம் ஆற்றல்களைப் பொழிந்திருப்போம். உணர்வாய் ஏற்கக்கடவது. பூரண ஆசிகள். .
Пікірлер: 6