Credits
Singer & Music Composer - Thenisai Thendral Deva
Lyricists Sakthis: Devi, Srinivaas Venkatarayan, Vijay Anand, Bharathi Senthil, Sridevi Velumyl
Audio Engineer - Charan
Recording Studio - Amma Talkies
Camera - Sakthis: Malar, Rakesh, Sugumar
Video Script - Sridevi Velumyl
Video Editing - Sakthis: DivyaBharathi, Indira, Ramya, Vinita
Thumbnail - Sakthi Rakesh
Lyrics
அம்மா உன்னை நினைக்காத நாளில்லை
நீயின்றி நான் இல்லை
உன்னைத் தவிர வேறு நினைப்பும் இல்லை
அம்மா மருவூர் அம்மா
அம்மா எத்தனை உறவுகள் எனக்கு இருந்தாலும் உன் போல எனக்கு உற்ற துணை வேறு யாரும் இல்லை அம்மா அம்மா மருவூர் அம்மா.
அம்மா நான் தினமும் காலையில் எழும்போதெல்லாம் தொழும்போதும் தொண்டு செய்யும் போதும் எந்த ஒரு நல்ல காரியம் செய்யும்போதெல்லாம் உன் நினைவே அம்மா
உன்ன நெனச்சி நான் எந்த ஒரு நல்ல காரியம் செஞ்சாலும் அம்மா
அது நல்லா நடக்குது அம்மா
நல்லா நடத்தி வெக்கிற அம்மா ..அம்மா..
உன்னத் தவிர அக்கறை காட்டத்தான்
யாரும் இல்லையே அம்மா
இங்க மத்தவங்க எல்லாம் சும்மா
ரெண்டு கையால
அம்மா …..
வணங்கும் எனக்கு
ஆயிரம் கையால அள்ளித்தர
அம்மானு கூப்பிடும் போதெல்லாம்
எனக்கு ஆபத்தில் உதவ ஓடி வர.
பங்காரம்மா என்னை கண் பாரம்மா
உன் கை கொண்டு என்ன கரை சேரம்மா….
சரணம் 1
தன் பெண்ணுக்கு வரன் ஒன்னு வரணும்னு
உன்னை வேண்டாத நாளில்லை உன் முன் நின்று
நல்ல வரன் ஒன்னு தந்தாயம்மா
சந்ததி இல்லாமல் தவிப்பவர்க்கு
தாயே நீ சொல்வாய் அருமருந்து
பிள்ளை வரம் கொடுத்தாய் அம்மா
கண்ணால் கடைக் கண்ணால் நீ
பார்த்தாலே போதுமே பாவம் தொலையுமே
அம்மா பங்காரம்மா
உன் பாதத்தை தொட்டாலே பாரம் குறையுமே.
ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சனை செய்து வந்தேன்
நீ ஒரு மலராக நெஞ்சினில்மலர்ந்திடம்மா..
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா துயர் தீர்ப்பாய் அம்மா
சரணம் 2
தாய் தந்தை சொல் பேச்ச கேட்காமல்
தப்பான வழி செல்லும் பிள்ளைக்கெல்லாம்
நல்வழிகாட்டும் தாய் நீயம்மா..
வேலை கிடைக்குமா என்று எண்ணி
அன்றாடம் ஏங்கும் இளைஞருக்கு
நல்ல வேலை வாய்ப்பும் தந்தாயம்மா
நம்பி உன்னை நம்பி
என்றும் தேடி வருவோரின் வாழ்வெல்லாம் நிம்மதி
பொங்கி வளம் பொங்கி
நாங்க கேட்டதை எல்லாம் கொடுக்கின்ற சன்னிதி.
குருவடி சரணம் என்று அனுதினம் தொழுது வந்தோம்
அன்புடன் நீ வந்து அருள் மழை பொழிந்திடம்மா..
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா
துயர் தீர்ப்பாய் அம்மா
சரணம் 3
கண் பட்டும் புண்பட்டும் நொந்து வந்தோம்
உன் காந்தப் பார்வையால மீட்டெடுத்த
இத சொல்லித்தான் யாருக்கும் உணர்த்த முடியுமா
வழக்கு வாய்தானு வந்து நின்னோம்
நான் பாத்துக்குறேன் போ என்று சொன்ன
நீ சொன்னபடி நல்ல தீர்ப்பு வந்ததம்மா
பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும்
பதறி ஓடி வந்து தீர்த்து வச்ச
செல்லாத காசிலும் செப்பு
எல்லோரும் சமம்னு புரிய வச்ச…
மருவூரின் மண்ண மிதிச்சா
மனக்குறை தீருமுன்னு
ஓடோடி நாங்க வந்தோம் நல்வழி காட்டிடம்மா
பங்காரம்மா எங்கள் பங்காரம்மா
துணை நீதானம்மா
துயர் தீர்ப்பாய் அம்மா…
#melmaruvathur #amma #guru #devasongs #deva
Негізгі бет #DEVA
Пікірлер: 102