நஞ்சம் உண்ட கண்டனார் நயந்து தந்த செல்வனே
பஞ்சபாத கந்தணந்த பண்பினோர் தொழும் குகா
இஞ்சி சூழ்ந் தடங்கண் மேய வேரகச் சுரேசனே
தஞ்ச மென்றடுத்த என்றனைப் புணர்ந்து கொள்வையே
வாசு வன்றிருக்க சத்து நீழலில் வமுத்திய
ஈசதூஷணைக் இணங்கினோர் புரந்தகித்து உளோர்
ஏசுறாது அளித்த செல்வ வேரகச் சுரேசனே
தாசன் என்று எடுத்த என்றனைப் புணர்ந்து கொள்வையே
புண்டரீக லோசனன் பொன் பூத்த வேதன் ஆலமார்
கண்டனென்னு மூவகைக் கருத்தரூம் தொழும்படிக்
கெண்டகைக்கு இணங்கணீடு வேரகச் சுரேசனே
தண்ட னிட்டடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
அங்கணார் சிகாவளத்தில் ஏறுகின்ற ஆண்டவா
மங்கை பாகனார்க்கு வேதவாக்கு மூலஞ் சொன்னவா
எங்குலந் தழைக்க வந்த வேரகச் சுரேசனே
சங்னை உற்று எடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
மாகரோடு நாகரும் வயங்கு மண்டலத்தரும்
போகு முன் எமக்கு அடைக்கலம் புகிற் சமன்று இசைக்கு
எகிடார் மெய்யென்று உரைத்த வேரகச் சுரேசனே
தாகமுற்ற எடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
இந்த நாள் உனைக் கருத்து இருத்தி என்கணே உளப்
பந்தம்யாவும் அற்றிடாத பண்பினைப் பொருத்தினான்
எந்த நாளு நன்குற நல் வேரகச் சுரேசனே
தந்தை என்று அடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
நாத ஓன் சிலம்பலம்ப நாடகம் புரிந்திடும்
பாத பங்கயங்களைப் பணிந்தும் இந்த நாளையோ
ஏது மின்றி மாய்வனோ நல் வேரகச் சுரேசனே
தாதை யென்ற அடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
பூமி எந்திரத்தினும் பொருந்து மேன்மை பூக்கவே
யாமியக் கைலாயநாதற்கு ஓம் உரைத்த வையநீள்
ஏமுறுந் தவத்தரேத்தும் வேரகச் சுரேசனே
சாமியென்று அடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
மங்கை நாடுய் பஞ்சவன் மகட்குமா முகங்கரந்
தங்க மான நன்முகங் கொடுத்த வாதி அன்பினால்
எங்குலங் கொள் ஈசனே நல் வேரகச் சுரேசனே
சங்கம் வேட்டடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
உம்பரும் புகழ் வகுப்புரைத்த வன்றொடுத்த சீர்
பம்பு மாலையைத் தினந்தினம் புனைந்த பாவகீ
எம்பிரான் எனை குணிற்கும் வேரகச் சுரேசனே
சம்பு வென்றடுத்த வென்றனைப் புணர்ந்து கொள்வையே
Негізгі бет எந்த நாளும் நன்குற | நஞ்சம் உண்ட கண்டனார்| சுவாமிமலை பதிகம் | பாம்பன் ஸ்வாமிகள் அருளியது
Пікірлер: 7