அந்தநாள் ஞாபகம் B.H.Abdul Hameed.......................
மறைந்த பத்திரிகையாளர் எழுத்தாளர் சுதாங்கன் பற்றிய நினைவலைகள்........
தினமணி நாளேட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின்னர் தமிழன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர். கடந்த ஆண்டு 2020 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி, உடல் நலம் குன்றியதால் நம்மைவிட்டுப் பிரிந்தார்.
"ரங்கராஜன்"எனும் இயற்பெயரைக் கொண்டவர். ஏற்கனவே "ரா.கி.ரங்கராஜன் எனும் பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்ததால், தன்பெயரை "சுதாங்கன்" என்று மாற்றிக்கொண்டார். புலனாய்வு இதழியலின் முன்னோடி எனப் புகழப்பட்டவர். புலனாய்வு எழுத்து என்பது மக்கள் பிரச்சினைகளுக்கு விடைதேடுவதிலும் பங்காற்றவேண்டும் என்று முழுமையாக நம்பியவர். ஆந்திரப் பிரதேசத்தில் கொத்தடிமைகளாய் வாழ்ந்த மக்களை காவல் துறையின் உதவியோடு மீட்டுவந்த சாதனையாளர். தமிழக அரசியலில் பரபரப்பான திருப்புமுனைகளில் அவரது எழுத்தின் வீச்சு மக்களால் பெருமளவில் வரவேற்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. பின்னாளில் தொலைக்கட்சித் துறையிலும் அவரது பங்களிப்புகள் தொடர்ந்தன. "ஜெயா" தொலைக்காட்சியைத் தொடர்ந்து முன்பிருந்த ZEE தொலைக்காட்சிக்காக என்னைச் சந்தித்துக் கண்ட செவ்வி இது. அவர் நம்மைவிட்டுப் பிரிந்து இன்று ஓராண்டாகிறது. அவரது நினைவேந்தல் பதிவாக இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருமை நண்பர் சுதாங்கன் அவரகளது ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள். அவரை இழந்த துயரைச் சுமந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Remembrance of the veteran journalist Mr.Suthangan who was the editor-in-chief of the Dinamani and later Thamilan Express news papers. He left us on September 11th 2020 due to illness.
Негізгі бет மூத்த ஊடகவியலாளர் "அமரர்"சுதாங்கனுடன் மறக்கவியலா சந்திப்பு | B.H.Abdul Hameed
No video
Пікірлер: 10