Mappedu Singeeswarar
Location:
goo.gl/maps/bz2JVugbu6Zkscnu9
This temple is located between Chennai and Perambakkam state high way.
Very peaceful and well maintained temple despite bringing very less crowd to the temple generally. See if you can contribute to the temple and priest in some way.
Timings:
This temple is timing temple better to call archagar and confirm the availability
Morning 6.00am-10.00am and evening 5.30pm-7.30pm
சிங்கீஸ்வரர் :
திருவாலங்காட்டில் சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மிருதங்கம் வாசித்த ‘சிங்கி’ என்பவர் சிவபெரு மானின் நடனத்தைக் காணாமல், இசைப்பதிலேயே கவனமாக இருந்தார். எம்பெருமானார் நடனத்தைக் காணமுடியவில்லையே என்று எண்ணி வருந்தியபோது, அன்றிரவு அவர் கனவில் தோன்றிய இறைவன், ‘மெய்ப்பேடு திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் மீண்டும் எனது காட்சியைக் காணலாம்’ என்றார். அதன்படி, மெய்ப்பேடு சென்ற சிங்கிக்கு, சிவபெருமான் நடனமாடி காட்சிதந்தார். இதனால் இத்தலத்து இறைவன், ‘சிங்கி + ஈஸ்வரன் = சிங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்
சுவாமியின் சன்னிதிக்கு வலதுபுறம் அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. நறுமணம் மிகுந்த மலருக்கு உரியவள் என்ற பொருளில் ‘ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அன்னை காட்சி தருகின்றாள். இவளே பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள். சதுரமான கருவறையில் நின்றகோலத்தில் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறாள்
இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் சுமார் 5௦௦௦ வருடங்களுக்கு முற்பட்ட வீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. இச்சன்னதி முன் ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப்பாடினார் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தல தீர்த்தமாக வெண் தாமரைக் குளமும் உள்ளன.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மப்பேடு திருத்தலம். பூந்தமல்லியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், காஞ்சீபுரத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும் புதூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலம் இருக் கிறது.
Негізгі бет Mappedu Singeeswarar | மப்பேடு சிங்கீஸ்வரர் | மூல நட்சத்திர பரிகார தலம் | அதிசய ஆஞ்சநேயர்|
Пікірлер: 91