மரவள்ளிக்கிழங்கு அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்
1. புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி 1/2:கிலோ
2. மரவள்ளிக்கிழங்கு 1/2 கிலோ
3. மிளகாய் வற்றல் 6
4. சின்ன வெங்காயம் 20
5. பூண்டு 7 பல்
6. கறிவேப்பிலை தேவைக்கு ஏற்ப
இனிப்பு அடைக்கு தேவையான பொருட்கள்
1. நாட்டு சர்க்கரை 1/4 கிலோ
2. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
3. ஏலக்காய் 5
உப்பு தேவைக்கு ஏற்றார் போல்
செய்முறை:
முதலில் அரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மரவள்ளி கிழங்கு அரிசி மற்றும் மிளகாய் சேர்த்து சற்று இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பூண்டு நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். தோசை கல்லில் அடையாக வார்த்து எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் நன்கு சிவப்பாக எடுத்து பரிமாறவும்.
இனிப்பு அடைக்கு அரிசியையும் கிழங்கையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் வார்த்து மிதமான தீயில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
Негізгі бет மரவள்ளி கிழங்கு / சவாரிக்கட்டை / Tapioca அடை
Пікірлер: 4