193 02.115 வெங்கள்விம்மு குழலிளைய
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம்-திருமுறை
பண் : செவ்வழி
நாடு :சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : புகலூர்
வெங்கள்விம்மு குழலிளைய
ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள்
பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரமொ
ரம்பாஎரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ
நாளும்மிடர் கழியுமே. 1
வாழ்ந்தநாளும் மினிவாழுநா
ளும்மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை
யேத்தாவிதி யில்லிர்காள்
போழ்ந்ததிங்கட் புரிசடை
யினான்றன்புக லூரையே
சூழ்ந்தவுள்ளம் உடையீர்கள்
உங்கள்துயர் தீருமே. 2
மடையின்நெய்தல் கருங்குவளை
செய்யம்மலர்த் தாமரை
புடைகொள் செந்நெல் விளைகழனி
மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள் கொன்றை புனைந்தானொர்
பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம்
ஆளப்பெறு வார்களே. 3
பூவுந்நீரும் பலியுஞ்
சுமந்துபுக லூரையே
நாவினாலே நவின்றேத்த
லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை
யல்லால்அடி யார்கள்தாம்
ஓவுநாளும் உணர்வொழிந்த
நாளென்றுளங் கொள்ளவே. 4
அன்னங்கன்னிப் பெடைபுல்கி
யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன
மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த
மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர்
ஏத்தச்சிறி தெளியரே. 5
குலவராகக் குலம்இலரு
மாகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ
ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும்
அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள்
பாதம்நினை வார்களே. 6
ஆணும்பெண்ணும் மெனநிற்ப
ரேனும்மர வாரமாப்
பூணுமேனும் புகலூர்
தனக்கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை
யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப
ரால்எம்பெரு மானையே. 7
உய்யவேண்டில் எழுபோதநெஞ்
சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரையெடுத்
தானையோர் விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள
வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர்
புகழப்பொருளாகுமே. 8
நேமியானும் முகநான்
குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப்
போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு
மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம்
மல்கும்புக லூரையே. 9
வேர்த்தமெய்யர் உருவத்துடை
விட்டுழல் வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ
லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த
தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது
பாதந்தொழு துய்ம்மினே. 10
புந்தியார்ந்த பெரியோர்கள்
ஏத்தும்புக லூர்தனுள்
வெந்த சாம்பற் பொடிப்பூச
வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட
லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி
யாடக்கெடும் பாவமே.
சுவாமி : அக்னிஸ்வரர்; அம்பாள் : கருந்தார்குழலியம்மை. 11
thirumurai/second-thirumurai/thirugnanasambandar-thevaram-thirupukalur-venggalvimmu
திருப்புகலூர் வெங்கள்விம்மு குழலிளைய
panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-1-to-3-thirumuraikal-varalatru-murai-padalkal
#திருநாவுக்கரசர்முக்திபெற்றதலம்
#கல்லைத்தங்கமாக்கியஈசன் #திருப்புகலூர் #AgneeswararTemple
#அக்னிபுரீஸ்வரர் #திருப்புகலூர்
#வாஸ்துதோஷம் #விலக்கும் #திருப்புகலூர்அக்னீஸ்வரர் #அக்னிபுரீஸ்வரர் #Tirupugalur #திருப்புகலூர்திருமுறை #திருப்புகலூர்தேவாரம் #திருப்புகலூர்பதிகம் #திருப்புகலூர்கோவில் #தேவாரம்பதிகம்விளக்கம்
#திருமுறைவிளக்கம்
#thirumurai #thirugnanasambandar #thevaram #தேவாரம்பாடப்பெற்றசிவதலம் #தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai #thevaraisai #thevarapathigam #thevarasongs #thevarathirumurai #திருப்பதிகவிளக்கம் #சிவாயநம #thevaram #sivanwhatsappstatus #thevaramclass #sivanwhatsappstatusintamil #sivaayanama #sivanstatus #sivankovil #sivantemple #sivan #sivan_whatsapp_status_tamil #திருஞானசம்பந்தர் #திருப்பதிகம் #தேவாரஓசை #thevaraosai #திருஞானசம்பந்தசுவாமிகள் #திருஞானசம்பந்தப்பெருமான் #திருஞானசம்பந்தநாயனார்
#நமசிவாயா #திருவாசகம் #சிவன் #ஆன்மீகம் #சைவம் #நடராஜர் #திருப்பெருந்துறை #ஆவுடையார் #கோயில் #மாணிக்கவாசகர் #பக்தி #பூஜை #நமசிவாயா #திருவாசகம் #சிவன்பாடல் #சைவம் #Namasivaya #Thiruvasakam #Shiva #Spirituality #Shaivism #Nataraja
#வரலாற்றுமுறை #பண்முறை #திருமுறை #திருமுறைபதிகம் #திருமுறைபாடல் #திருமுறைவிளக்கம் #திருமுறைபொருள் #திருமுறைகள் #திருமுறைவகுப்பு #thirumuariclass #thevaramonlineclass #thiruvasagamclass #திருமுறைபயிற்சி #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தர்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருப்பதிகம் #திருஞானசம்பந்தர்பாடல், #ஞானசம்பந்தர் #சம்பந்தர் #தேவாரம்விளக்கம் #தேவாரஒசை #தேவாரஓசைபதிகம்
Негізгі бет Ойын-сауық முற்பிறவி பாவங்களைப் போக்கும் திருப்புகலூர் வெங்கள்விம்மு குழலிளைய Tirupugalur தேவாரம் வாஸ்துதோஷம்
Пікірлер: 5