நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-66
நூல்: வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
ஆசிரியர்: புலவர் கா கோவிந்தனார்
நயவுரையாளர்: திரு கா. செல்வராசு
நாள்:- 07/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
நூலாசிரியர் குறிப்பு: புலவர் கா கோவிந்தனார்
தமிழுக்கும், தமிழ் புலவர்கட்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னையே அரப்பணித்த பெருமகனார். புலவருள் புலவராய் விளங்கி குன்றக்குடி ஆதினத்தாரின் “புலவரேறு” பட்டம், தமிழக அரசின் திரு.வி.க விருது மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் “தமிழ் பேரவைச் செம்மல்” பட்டம் பெற்றவர். தமிழில் 71 நூல்களை எழுதிய பெருமகனார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒரு முறையும் பணியாற்றியுள்ளார். செய்யாறு தமிழக சட்ட மன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர். "வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி" நூல் 137 பக்கங்களைக் கொண்டது. அரசினால் நாட்டுடமையாக்கப் பட்ட நூல்.
அறிமுகம் செய்வார் குறிப்புரை: திரு கா. செல்வராசு
முதுநிலை பட்டப் படிப்பு (அரசியல்) முடித்தவர். கனரா வங்கியில் திறம்பட பணியாற்றி முதுநிலை மேலாளராக 2016ல் பணி நிறைவு செய்தவர். திருக்குறளில் இளம்வயது முதல் ஆர்வம் உள்ளவர். இலக்கிய வாசகர். புதுக்கவிதை புனைவதில் நாட்டம் மிகக் கொண்டவர். மனித நேயர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர். 97 ஆண்டு பெருமை மிக்க தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் அண்மையில் "அகநக நட்பே நட்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வாரம் ஒருமுறை நடத்தப்படும் இந்த திருக்குறள் நூல் அறிமுகம் செய்யும் "நவில்தொறும் நூல்நயம்" நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்
#திருக்குறள் #thirukkural #kural #குறள் #நூல்நயம் #valaitamil #voiceofvalluvar #thirukuraltamil
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 66 | வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
Пікірлер