palm juice,pathaneer eadukkum murai,palmyra palm juice,panai maram ari pathaneer irakkuvathu eppadi,panaimaram earuvathu eppadi,panaimaram elimaiyaga earuvathu eppadi,பனை மரம் எளிமையாக ஏறுவது எப்படி,பனைமரம் ஏறி பதனீர் இறக்குவது எப்படி,தமிழர் பனை மீட்பு இயக்கம்,thamilar panai meetpu eyakkam,பனையரசன்,panaiarasan,பனைமரம் பாளைகளை இடுக்குவது எப்படி,panaimaram palaikalai edukkuvathu eppadi,பதனீர் இறக்குவது எப்படி,pathaneer erakkuvathu eppadi,பதநீரின் நன்மைகள்,pathaneer,how to make pathanir,how to make pathaneer
பனை நம்மை காக்கும்:
பனை சார் வாழ்வியல்:
பனையோடு உறவாடுவோம்:
பனையேற்றுதல் என்பது தற்சார்பின் உச்சங்களில் ஒன்று என்று கருதுகிறேன்.
பனைத்தொழில் இப்போதைய பார்வை. பனை சார் வாழ்வியல் என்பதே சரியான பார்வையாகும். பனை சார் வாழ்வியல் எந்த காலத்தில் மக்கள் பின்பற்ற தொடங்கினார்கள் என்று நம்மால் துள்ளியமாக கணக்கிட முடியாத அளவுக்கு தொன்மையான மரபு ஆகும்.
பனை எனும் உயிரானது மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு மற்றும் இருப்பிடம் எனும் இரண்டையும் எக்காலத்திலும் பூர்த்தி செய்ய வல்லது.
மனிதன் எப்போதும் தேவை கருதியே சிந்திப்பது இயல்பு. ஒரு உயிரினத்தோடு தேவையையும் தாண்டி பழகுவதே உறவாடுதல் ஆகும். அவ்வாறே மக்கள் பனையோடு உறவாடி வந்தனர்.
பனை மரம் பல்வேறு நில பகுதிகளிலும் பொருந்தி வளர்கிறது. பனை மரம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தாலும், கடலோர பகுதிகளில் தான் பனை சார் வாழ்வியல் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்றனர்.
பனை தொழில் செய்வதில் பல அற நெறிகள் பின்பற்றப்படுகிறது.
இந்த காலத்தில் பனையை நாம் காக்க வேண்டும் என்று சொல்வது அகந்தையாகும் என்பது எனது பார்வை. நாம் பனையை காக்க முடியாது. பனை தான் நம்மை காக்கும்
தெய்வப்பனை அழியாது. இந்த நிலப்பரப்பில் வேண்டுமானால் இல்லாமல் போகலாம், ஆனால் அழியாது.
பனையை காக்க விதை நடவு செய்வது என்பது சிறு பகுதி வேலை. நாம் விதைத்து வளர்ந்து பருவத்துக்கு வர குறைந்தது 10 முதல் 15 வருடமாவது ஆகும். மீண்டும் இந்த மனிதர்கள் இந்த மரத்தால் என்ன பயன் என்று கூறி அழிப்பார்கள்.
பனையின் பயன்பாடுகளை மக்களிடம் நாம் பயன்படுத்தி காண்பிக்க வேண்டும்.
பனை சார் வாழ்வியல் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது மட்டுமன்று.
யாரெல்லாம் அற வழியில் பொருள் ஈட்டி இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் பனை சார் வாழ்வியலை தேர்ந்தெடுக்கலாம்... அதோடு பனை பால் மற்றும் பதிநீர் இறக்குவது பனையோடு உறவாடுபவர்களின் விருப்பம்.. இதற்கு இடையில் அதிகாரம் தடையாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாட்களில் காணாமல் போய் விடும்.. அதிகாரம் விரைவில் அற்றுப்போகும்!!!
இப்போது ஊழி காலத்தின் உச்சம். இந்த ஊழியிலிருந்து வருங்கால சந்ததியினரை நிலைக்க வைக்க நாம் பனையை கட்டி பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வாரே தற்போது சிலர் பனையை இருக்கி கட்டி அனைத்துக்கொண்டனர். அவர்கள் பனையை போல் எக்காலமும் இன்புற்றிருப்பர்.
பனை சார் வாழ்வியல் என்பது பனைமரத்தோடு மட்டும் சார்ந்ததல்ல. பனை குடும்பத்தை சேர்ந்த தென்னை மரம், ஈச்ச மரம், கூந்தப்பனை மற்றும் தாளிப்பனை போன்றவைகளோடு பின்னி பினைந்த வாழ்வியலாகும்.
என்னுடைய பனை பயணமானது பனை விதையில் தொடங்கி பனை பால் மற்றும் பதிநீர் இறக்குவது நோக்கிய பயணமாகும். இது ஒரு நீண்ட நெடிய தலைமுறை கடந்த பயணமாக அமையும் என்று கருதுகிறேன்.
-🌴 பனையரசன் 🚶🏼
Негізгі бет பனை மரம் ஏறத் தெரியாதவர்களும் பதநீர் இறக்குவது எப்படி? Pathaneer Erakkuvathu Eppadi?
Пікірлер: 102