கௌமார மடாலயம், குமரகுருபரக் கடவுள் கலையரங்கத்தில் "அக்கம் பக்கம்" இருமொழி வார இதழ் ஏற்பாடு செய்திருந்த, "உலகத் தாய்மொழி தினத் திருவிழா 2019" இன்று (23.02.2019) சிறப்பாக நடைபெற்றது,
*சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் விழாவிற்கு தலைமையேற்று ஆசியுரை வழங்கினார்கள்,
*அக்கம் பக்கம் வார இதழ் இணை ஆசிரியர் திரு.அ.சதீஸ்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,
*சென்னை, விழி இயக்க நிறுவனத் தலைவர், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் திரு.இரா.கார்த்திகேயன் அவர்கள்,
*கோவை, கணபதி தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் திரு.நித்தியானந்த பாரதி அவர்கள்,
*பாரதியார் பல்கலைக்கழகம் திருமதி.ப.மகேஸ்வரி அவர்கள்,
*கம்பன் கலைக்கூட நிறுவனத் தலைவர், மருத்துவர் திரு.கு.சுப்பிரமணியம் அவர்கள்,
*அக்கம் பக்கம் வார இதழ் கட்டுரையாளர் திருமதி. கல்யாணி சுகுமார் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்,
*பல்வேறு பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்ப்பட்ட மாணாக்கர்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டனர்,
*சிலம்பம், வாள்வீச்சு, பறையிசை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன,
*மரப்பாச்சி பொம்மைகள், பனையோலை கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், மூலிகை மருத்துவப் பொருட்கள், ஓலைச் சுவடிகள், பாரம்பரிய கீரை வகைகள் ஆகிவற்றின் கண்காட்சியும் நடைபெற்றது,
*மேலும் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் கையொப்பமிட்ட "படிப்பது சுகமே", "அச்சம் தவிர்" ஆகிய இரு புத்தங்களையும் போட்டியில் கலந்துகொண்ட மாணாக்கர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் திருமதி.ப.மகேஸ்வரி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.
Негізгі бет Музыка பறையிசை | Parai Music | தப்பாட்டம் | Thappattam
Пікірлер: 85