தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
வலம்புரநாதர் கோயில்
திருவலம்புரம் தற்போது
மேலப்பெரும்பள்ளம் (107/274)
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 44வது தலம். திருமால் சிவனாரை வழிபட்டு வலம்புரிச் சங்கினை பெற்ற தலம்.
மூலவர்: வலம்புரநாதர்
அம்பாள்: வடுவகிர்க்கண்ணியம்மை
தலமரம்: பனை மரம்
தீர்த்தம்: பிரம்ம ,லட்சுமி , சிவகங்கை
புராண பெயர் : திருவலம்புரம்
ஊர் : மேலப்பெரும்பள்ளம்
மாவட்டம்: மயிலாடுதுறை
தலவரலாறு
புராண காலத்தில் காவிரி நதி கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவலஞ்சுழி என்ற ஊரில் உள்ள குகையில் சென்று மறைந்தது. அதை
மீட்க `மகரிஷி ஒருவர் தன்னைத்தானே பலியிட வேண்டும்' என்று அசரீரி கேட்டது. இதைக்கேட்ட அந்த நாட்டு மன்னன் ஏரண்ட மகரிஷியிடம் சென்று வேண்டிக்கொண்டான். ஏரண்ட மகரிஷியும் உலக நன்மைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறி அந்தக் குகைக்குள் இறங்கினார். காவிரி மீண்டும் வெளிப்பட்டு ஓடத்தொடங்கியது. உள்ளே சென்ற மகரிஷி அந்தக் குகையில் உள்ள காவிரியில் மூழ்கி, திருவலம்புரத்தில் வந்து கரையேறினார். அங்கேயே வலம்புரநாதரை வழிபட்டு ஜீவசமாதி அடைந்தார் என்கிறது தலபுராணம். அதற்கேற்ப, இங்கு வலம்புரநாதரின் ஆலயத்துக்கு எதிரிலேயே ஏரண்ட மகரிஷிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.
தட்சிண மகாராஜா எனும் மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். இதனால் அரசன் `ஸ்திரீ ஹத்தி' எனும் தோஷத்தால் பீடிக்கப்பட்டுத் துன்புற்று வந்தான். தனது தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வந்தான். ஆனால், மன்னன் குணமடையவில்லை. ஒருமுறை மன்னன் இத்தலத்துக்கு வந்து இறைவனை தரிசனம் செய்கையில் ``தினமும் பல ஆயிரம் பேருக்கு இங்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதில் லட்சத்தில் ஒருவர் உத்தமராக இருந்தால் இவ்வாலயத்தில் உள்ள நாவில்லா மணி ஒலிக்கும். அப்போது, உன் சாபம் நீங்கப் பெறும்" என்ற அசரீரி ஒலித்தது.
இதன்படி மன்னனும் அன்றாடம் பலருக்கும் அன்னதானம் செய்துவந்தான். இவ்வூரில் பிறந்தவரான பட்டினத்தடிகள் தனது சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து பிச்சாண்டவராகி, முக்தி பெற வேண்டி ஒரு நாள் பசியுடன் இங்கு வந்தார். அவரின் ஆண்டிக் கோலத்தைக் கண்ட காவலன், அவரை அன்னதானத்துக்கு அனுமதிக்கவில்லை.
கோயில் பிராகாரத்தில், அன்னதானத்துக்குச் சமைத்த உணவின் வடிகஞ்சியை ஊற்றியிருந்தனர். அது சிறு கால்வாயில் ஓடிக்கொண்டிருந்தது. தன் பசியைப் போக்கிக்கொள்ள பட்டினத்தார் அதை அள்ளிப் பருகினார். அப்போது ஆலயத்தின் நாவில்லா மணி ஒலிக்கத் தொடங்கியது. இதை அறிந்த மன்னன், `யார் அந்த உத்தமர்' என்று கண்டு அழைத்துவரச் சொன்னான். காவலன் மூலமாக நடந்ததை உணர்ந்து பட்டினத்தாரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான். அவனை வாட்டிய தோஷம் நீங்கப்பெற்றது.
பிராத்தனை
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம்.
ஒருவரது ஜாதகத்தில் ராகுவும், சுக்கிரனும் சேர்வதன் விளைவாக அவருக்கு ஏற்படக் கூடிய அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கு இத்தலத்திற்கு 24 முறை வந்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.
தலச்சிறப்பு
தலபுராணம் உரைப்பதைப் போல, பிரம்மஹத்தி தோஷத்தையே நீக்க வல்லது இத்தலம். முக்தி அடைய விரும்புவோருக்கு முதன்மையான தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
மகத நாட்டு மன்னனின் அஸ்தியைக் கரைக்கும் இடம் தேடி அலைந்த அவன் மகன் இத்தலம் சேர்ந்தபொழுது, அச்சாம்பல் சங்கு மலரானதாம். அதனால், அது இங்கேயே கரைக்கப்பட்டதாம். இதன் காரணமாக, இத்தலம் காசியை விடவும் புனிதமானது என்றும் கூறுவர்.
தட்சன் பார்வதியே தன் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிப் பெற்ற தலமிது. ஆகையால், இங்கு வந்து வழிபடுவோர் புத்திர பாக்கியம் பெறுவது உறுதி.
இத்தலம் சகல விதமான நாக தோஷங்களையும் விலக்குகிற பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதகத்தில் ராகு கேதுவால் பீடிக்கப்பட்டவர்களோ, சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷத்தால் துன்புறுகிறவர்களோ இங்கு வந்து பரிகாரம் செய்தால் தம் துயர் நீங்கப் பெறுவர்.
பெண்களுக்கு இழைத்த வன்கொடுமையால் சாபம் பெற்றவர்கள் அச்சாபத்தின் தீவினையிலிருந்து தப்பிக்க இத்தலத்தை ஏகி இங்கு மனமாற வழிபட்டால் பலனுண்டு.
திருமணத் தடைகளைப் போக்கும் தலமாகவும் இது கூறப்படுகிறது.
தோல்வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறவும் இங்கு வழிபடுகின்றனர்.
நானடைந் தேற்றப் பெற்று நல்வினை பயனுற்றேனே' என்று திருநாவுக்கரசர் இவ்வாலய இறைவனைப் பற்றி மனம் உருகப் பாடியுள்ளதைப்போல், இவ்வாலயத்துக்கு வந்து வலம்புரநாதரை வணங்குவோர் தங்களின் தீய வினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று நிறைவான கல்வியும், குறைவற்ற செல்வவளமும் பெறுகின்றனர்.
அமைவிடம்
பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள சட்ரஷ் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் மேலப்பெரும்பள்ளம் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ, பூம்புகாரில் இருந்து 5 கி.மீ, கீழப்பெரும்பள்ளம் கேது கோயிலில் இருந்து 4 கி.மீ மற்றும் தலைச்சங்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலப்பெரும்பள்ளம்.
கேது கோயில், தலைசங்காடு மற்றும் பூம்புகாரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
கோயில் Google Map link
maps.app.goo.g...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 8110805059
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
திருவலஞ்சுழி வஞ்சுழிநாதர் கோயில் தரிசனம்
• திருவலஞ்சுழி வலஞ்சுழிந...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்
Негізгі бет பெண் சாபம் போக்கும் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் | வீணை ஏந்திய அழகிய பிட்சாடனர்
Пікірлер: 20