ஈத் பெருநாள் திடல் தொழுகை
இன்று பொதக்குடியில் அமைந்துள்ள மர்ஹூம். MA நூருல்லாஹ் நினைவு மைதானத்தில் ஈத் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்…!!!
எல்லா புகழும் நம்மை படைத்த வல்லோனுக்கே உரியது.
வருடா வருடம் பல பல எதிர்ப்புகள் எத்தனை வடிவத்தில் வந்தாலும் நமதூரின் பெரும்பாலான சகோதரர்கள் திடலுக்கு வந்து ஈத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவிட்டு சந்தோஷத்துடன் தான் செல்கின்றனர்.
ஏன் என்றால்???
நமதூர் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி தங்களது தொழுகையை நிறைவேற்றிவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி சலாம் சொல்லிக்கொண்டு நமது அன்பை பரிமாற்றிக்கொள்வது எல்லாம் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக அமைகிறது.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலும் தற்போது உள்ள ஜமாஅத் நிர்வாகம் மாறினாலோ, இல்லை, இப்போது போல் பிற்க்காலத்திலும் பல எதிர்ப்புகள் வந்தாலோ, எங்களை போன்ற இளைஞர்கள் அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு ஈத் பெருநாள் தொழுகையை எக்காரணத்தினாலும் கைவிடாமல் இதை விட சிறப்பாக ஏற்பாடு செய்து திடலில் தொழுகையை தொடர செய்வார்கள்.
பொதக்குடி ஜமாத்தார்கள் அனைவரும் இன்று போல் என்றும் நமது ஒற்றுமையின் பலத்தை இதை விட கூடுதலாக நிரூபிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்…!!!
ஏக வல்லோன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டுமாக🤲🤲
ஆமீன்.! ஆமீன்..!! யா ரப்புல் ஆலமீன்…!!!
இவன்,
PODAKKUDI MEDIA
Негізгі бет பொதக்குடியில் அமைந்துள்ள MA நூருல்லாஹ் நினைவு மைதானத்தில் ஈத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது
Пікірлер