புரளி பரப்பும் போலிகள் - ஸ்ரீ வடுவூர் ராமர் கோவில்
இரண்டு நாட்களாக சுமார் 150 மெசேஜ் எனக்கு பல நபர்களிடம் பார்வேட் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
அது செ வடுவூர் ராமர் கோவிலில் அர்சகர்களை கோவில் செயல் அலுவலர் கொடுமை படுத்துவது போல ஒரு பொய்யான செய்தி.
அது உண்மையா என்று அனுப்பியவர்களிடம் கேட்டேன். நீங்கள் சென்று பார்த்தீர்களா என்று கேட்டேன். எல்லோரும் எனக்கு யாரோ அனுப்பினார்கள் என்றார்களே ஒழிய அதை உறுதி செய்ததாக ஒருவரும் சொல்லவில்லை.
நம்பிக்கைகுறிய நபர்களிடமிருந்தும் கூட அச்செய்தி வந்திருந்தது. அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு அனுப்பினேன் என்றார்களே ஒழிய ஒருவரும் இது உண்மையா என்று கூட பார்க்க முனையவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை செய்யும் சட்டவிரோத செயல்களை நான் எதிர்த்து கேட்கிறேன் என்பதற்காக எதை வேண்டுமானாலும் அனுப்பினால் ரங்கராஜன் கேட்பான் என்று நினைத்தார்கள் போலும்.
தவறு நடந்தால் அதை சரி செய்யக்கூடிய செயலை என்னால் இயன்ற மட்டில் செய்வேன். ஆனால் பொய் பரப்பி அதில் குளிர்காய நினைத்தால், என்ன என்று சொல்வது?
உதவி செய்ய இயலவில்லை என்றால் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே!!!!!
என்ன உலகமோ!
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
Негізгі бет புரளி பரப்பும் போலிகள் - ஸ்ரீ வடுவூர் ராமர் கோவில்
Пікірлер: 106