"சகல செல்வங்களும் தரும்" - என்று தொடங்கும் - அபிராமி பட்டர் அருளிய "அவிராமி அம்மை பதிகம் - 2" ன் 11 ஆவது பாடல்
இதை பக்தியுடன் மனம் மெய் மொழிகளால் ஓதுபவர்க்கு அன்னை அபிராமி 16 செல்வங்களையும் வழங்குவாள்
குரலிசை : நித்யா அருணாசலம்
Abirami & Abirami pattar painting in Thumbnail credits:
/ velen.mootooveeroo (ஞான வேலன் அவர்கள்)
11th song from 2nd Abirami Ammai Pathigam sung by the great Abirami Pattar - praising Thirukkadaiyur - Abirami. Thirukkadaiyur is a village 300 km south of Chennai and 15 km north of Karaikal. The history of the village is associated with the legends of Markandeya and Abirami Pattar.
This song "Sagala Selvangalum tharum" is the 11 th song in Pathigam 2 - and its beleived one who sings this song with atmost devotion to Goddess Abirami is blessed with the great 16 riches in this world
அபிராமி பட்டரின் சிறப்பு
யமனை காலால் அடக்கிய சிவன், கோயில் கொண்டிருக்கும் திருக்கடவூரில் - அமிர்தலிங்க அய்யருக்கு மகனாய் பிறந்தார் அபிராமி பட்டர் என்னும் சுப்ரமணியன். சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார். இவர் அபிராமியின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் மனத்திலே தேவியை ஒளி வடிவில் கண்டு பேரானந்தத்தில் ஆழ்ந்திருப்பார். இந்த முத்தி நிலையில் பித்தர் (பைத்தியம்) போலவும் பேதையர் (அறிவில்லாதவர்) போலவும் உலக பற்றின்றி கடவுளுடன் ஒன்றி எந்த நேரமும் இருந்த பட்டரை யாரும் புரிந்து கொள்ளவில்லை.அக்காலத்தில் தஞ்சையை தலைநகரமாக கொண்டு, மஹாராஷ்டிர பரம்பரையை சேர்ந்த, சரபோஜி என்ற மன்னர் ஆண்டு வந்தார்.அவர் ஒரு தை மாதத்து அமாவாசை தினத்தில் காவிரியில் நீராடி, அமிர்தகடேசுவரரையும் அபிராமி அன்னையையும் வழிபட வேண்டும் என்ற ஆசை ஏற்பட திருக்கடவூரை அடைந்தார்.
திருக்கோவிலில் பட்டரைக் கண்ட மன்னர் - அவருடன் உரையாடும் விருப்பத்தால் "பட்டரே, இன்று என்ன திதி?" என்று கேட்டார். (அன்று அமாவாசை என்பதை முன்பே பார்த்தோம்.) கண் மூடிய நிலையில், கோடிசூர்யப் பிரகாசமாய் அன்னையைத் தன் மனக்கண்ணில் கண்டு களித்திருந்த பட்டர் சற்றும் தாமதியாது, பௌர்ணமி என்றார்.
பால் நிலவாய் பராசக்தி உள்ளத்தில் பிரகாசிக்கும் போது, பக்தனுக்கு எல்லா நாளுமே முழுநிலவு நாள் தானே! சோதிப்பதற்காக சரபோஜி மன்னர் கேட்ட அன்றைய திதி பற்றிய கேள்விக்கு, தவறான தகவலை மெய்மறந்த நிலையில் கூறி விடுகிறான் உன்னத பக்தன்.
“அப்படியென்றால் இன்று இரவு நிலவு வருமா?” மன்னர் கேட்க; “நிச்சயம் வரும்” கண்மூடிய மோன நிலையில் பக்தனின் விடை. “வராவிட்டால் உனக்கு மரண தண்டனை” இது அரசகட்டளை என்று கூறி மன்னர் சென்று விடுகிறார்.
மெல்ல மெல்ல கண் விழித்து தன்னிலை அடைந்த பட்டர், நடந்ததை அறிந்து சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அன்னையிடம் ஓடினார். தாயே! இன்றிரவு வானில் முழுநிலவு வர வேண்டும். வராவிட்டால் என் உயிர் பிரியும் என்று கூறி, கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டினார். மேல் விட்டத்திலிருந்து நூறு ஆரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு, அதில் ஏறி அமர்ந்தார். ‘உதிக்கின்ற செங்கதிர்’, என்று அன்னையைத் தியானித்து அந்தாதி பாடத் தொடங்கினார். அபிராமி அந்தாதி மொத்தம் 100 பாடல்கள். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். மாலையும் வந்தது... பொழுது சாய்ந்தது; பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிடைக்கவில்லை. பட்டரின் நம்பிக்கை சாயவில்லை! அமாவாசை வானம் இருண்டு கிடந்தது. ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று பிள்ளை காத்து நின்றது. அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு அலையும் மக்களுடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், அந்தாதியின் எழுபத்து ஒன்பதாவது பாடல்;
“விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே” என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை (ear ring) எடுத்து வானத்தில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று சேர்ந்தது போல் ஒளியை வீசியது.
அவள் பட்டரிடம்; “நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் உண்மை என நிரூபித்தேன். அந்தாதியை தொடர்ந்து பாடு", என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் மகிழ்ச்சி அடைந்தார். மக்களின் ஆரவாரம். மன்னரின் புகழாரம். மீதி இருபத்தொரு பாடலையும் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்து அபிராமிபட்டர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார் திருக்கடையூர் பக்தர் சுப்பிரமணியர்.
அவர் அருளிய அபிராமி அம்மை பதிகத்தில் இருந்து ஒரு பாடல் இந்த "சகல செல்வங்களும் என்ற பாடல்". இதை பக்தியுடன் மனம் மெய் மொழிகளால் ஓதுபவர்க்கு அன்னை அபிராமி 16 செல்வங்களையும் வழங்குவாள்
Негізгі бет Ойын-сауық Sagala Selvangalum Tharum |சகல செல்வங்களும் தரும்|அபிராமி பதிகம்| Abirami Pathigam|Nithyaisaivisai
Пікірлер: 39